வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 202
“நான், என்றும் இளமை குன்றா என் பிரபாவின் உருவத்தை என் மனத்திலே தீட்டிக் கொண்டிருக்கிறேன்.”
“காதல்! இதைத்தான் நான் விரும்பினேன். இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்” என்று சொல்லி, அஸ்வகோஷின் கன்னங்களைத் தன்னுடைய பட்டுக் கன்னங்களோடு ஒற்றிக்கொண்டு கற்சிலையாய் நின்றாள்.
7
ஓர் அகன்ற முற்றம். அதைச் சுற்றி நான்கு புறமும் பத்தி. அதன் பின்னால் இரண்டு மாடிகள் உள்ள வீடுகள். பத்தியில் கொடிக் கயிற்றிலே மஞ்சள் நிற ஆடைகள் காய்ந்துகொண்டிருக்கின்றன. முற்றத்தில் ஒரு
மூலையில் கிணறும் அதை அடுத்துக் குளிக்குமிடமும் இருக்கிறது. முற்றத்தில் பல மரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அரச மரம். அந்த அரச மரத்தின் நான்குபுறமும் மேடை கட்டப்பட்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஆயிரக் கணக்கான விளக்குகள் வைக்கக்கூடிய ஒரு கல் மாடமும் இருக்கிறது. அந்தப் பெரிய விருட்சத்தின் முன்னே முழங்கால் படியிட்டு வணங்கிய பிரபா,
“அன்ப! இதே ஜாதி மரத்தின் கீழ் அமர்ந்துதான் கௌதம சித்தார்த்தர், தமது முயற்சியினாலும் ஆழ்ந்த சிந்தனையின் மூலமும், மனத்தின் மயக்கத்தை யெல்லாம் போக்கி அறிவின் பேருண்மையைப் பெற்றார். அன்று முதல் புத்தர் என்று அழைக்கப்பட்டார். அந்தத் தூய நினைவின் ஞாபகார்த்தமாகவே இந்த ஜாதி மரங்களுக்கு முன்னால் தலை வணங்குகிறோம்.”
“தன் முயற்சியாலும் தனது சிந்தனையின் மூலமுமே, மனத்தின் மயக்கங்களைப் போக்கி அறிவின் தெளிவைப் பெற்றதின் அடையாளம் இம்மரங்கள். இவ்வித அடையாளங்களை வணங்கத்தான் வேண்டும். இவ்வித அடையாளங்களை வணங்குவது முயற்சியையும் ஆத்ம வெற்றியையும் வணங்குவதாகும்.”
இருவரும் தலைமைப் பிக்ஷு தர்ம ரட்சிதரிடம் சென்றார்கள். அப்பொழுது அவர் முற்றத்திலே ஒரு மகிழ மரத்தடியிலே உட்கார்ந்திருந்தார். அதன் மலர்கள் நான்கு புறமும் நறுமணத்தை வீசிக்கொண்டிருந்தன. பிரபா பௌத்த முறைப்படி பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாள். அஸ்வகோஷ் நின்றபடியே கைகூப்பி வணங்கினான். இருவரும் அங்கு பூமியிலே விரிக்கப்பட்டிருந்த
தோல் ஆசனத்தின் மீது அமர்ந்தார்கள். அஸ்வகோஷ், பிக்ஷு சிரேஷ்டரிடம் ஏதோ பேச வந்திருக்கிறார் என்று கருதிய சிஷ்யர்கள் அங்கிருந்து அகன்றனர். சம்பிரதாய மரியாதைப் பேச்சுக்களுக்குப் பிறகு,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 202, புத்தகங்கள், பக்கம், பிரபா, வால்காவிலிருந்து, கங்கை, மனத்தின், போக்கி, சிந்தனையின், ஜாதி, அறிவின், இவ்வித, பிக்ஷு, இருவரும், மரத்தின், அடையாளங்களை, அஸ்வகோஷ், புறமும், அஸ்வகோஷின், உன்னுடைய, வாழக்கூடியவள், சிறந்த, வேண்டும், இதைத்தான், முற்றத்தில், நான்கு, நான், இருக்கிறது