வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 203
“பிராமண குமார! பௌத்த மதம் (ஞானிகள் மதம், பௌத்தம்-ஞானம்) தத்துவத்தைக் கூட ஒருதலை-அதாவது பார்வையை ஒரே வழியில் குறுக்குவது என்று சொல்லுகிறது.”
“சிரேஷ்டரே! அப்படியானால் பௌத்த மதத்தில் தத்துவத்திற்கு இடமே இல்லையா?”
“இடம் ஏன் இல்லை? பௌத்த மதமே தத்துவமயமானதுதான். ஆனால் புத்தர் பெருமான் நதியைக் கடப்பதற்குத் தெப்பத்தைப்போல் அதை உபயோகிக்க வேண்டுமே தவிர, தலைமீது தூக்கிக் கொண்டு அலையக் கூடாதென்று தெளிவாக்கி இருக்கிறார்.”
“என்ன சொன்னீர்கள்? தெப்பத்தைப் போலவா?”
“ஆம்; படகில்லாத இடத்தில் நதியைக் கடப்பதற்கு ஜனங்கள் தெப்பத்தைக்கட்டி அதைக் கொண்டு அக்கரை சேர்கிறார்கள். ஆனால் அக்கரை சேர்ந்ததும் தங்களுக்கு உதவி செய்தது என்பதற்காக அந்தத் தெப்பக் கட்டைகளைத் தலைமீது தூக்கிச் செல்வதில்லை.”
“தான் உபதேசம் செய்யும் மதத்தைப் பற்றியே இவ்விதம் சொல்ல ஒருவனுக்கு தைரியம் இருக்குமானால், அவன் நிச்சயம் சத்தியத்தையும் அதன்
சக்தியையும் தெரிந்தே இருப்பான் சிரேஷ்டரே! புத்த தத்துவத்தைப் பற்றி நான் சரியாகப் புரிந்து கொள்வதற்குரிய விஷயங்களைத் தெரிவியுங்கள்.”
“முதலாவதாக அநாத்ம வாதத்தையே எடுத்துக் கொள்வோம் குழந்தாய்! பிராமணர்கள், ஆத்மா நித்தியமானது-அழிவற்றது என்று கருதுகிறார்கள். புத்தரோ, உலகத்தில் உள்ளும் புறமும் அழிவற்ற நித்யவஸ்து எதுவும் இருப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை. உலகத்தின் பொருள்கள் யாவும் க்ஷணத்திற்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கிறது. தோன்றியது அழியும் என்றே கூறுகிறார். அதனால்தான் அவருடைய தத்துவத்தை ‘அநாத்மாதம்’ என்று சொல்கிறார்கள்.”
“என்னைப் பொறுத்தவரை இது ஒன்றே போதும் சிரேஷ்டரே! தன் உபதேசத்திற்கே தெப்பக்கட்டை உதாரணத்தைக் கொடுத்தவரும் அநாத்ம வாதத்தைப் பிரகடனப்படுத்தியவருமான புத்தர் பெருமான், அஸ்வகோஷ் தலை குனிந்து வணங்குகிறான். அஸ்வகோஷ் எதைத் தேடிக் கொண்டிருந்தானோ அது அவனுக்குக் கிடைத்துவிட்டது. என் மனத்திலே எண்ண அலைகள் பெருக்கெடுக்கின்றன. அவற்றிக்கு ஒரு பெயர் கொடுக்கும் சக்தி எனக்கில்லை. புத்தர் பெருமானின் உபதேசங்களை, ஜனங்கள் சரியாக ஏற்றுக் கொண்டிருந்தால், இன்று உலகம் வேறுவிதமாக இருக்கும்.”
“சரியாகச் சொன்னாய் குழந்தாய்! எங்கள் கிரேக்க நாட்டிலே பெரிய பெரிய தத்துவ ஞானிகள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிலே பிதாகோர், ஹெராக்லிட்டோ இருவரும் புத்த பெருமானின் சம காலத்தவர்கள். சாக்ரடீஸ்,
டொமாக்ரட்டோ, பிளேட்டோ, அரிஸ்டாட்டல் நால்வரும் அவருக்குச் சிறிது பிந்தியவர்கள். இந்தக் கிரேக்க தத்துவாசிரியர்கள் மிகச் சிறந்த விஷயங்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 203, புத்தகங்கள், வால்காவிலிருந்து, புத்தர், பக்கம், பௌத்த, கங்கை, சிறந்த, குழந்தாய், அநாத்ம, புத்த, கிரேக்க, பெரிய, சிரேஷ்டரே, பெருமானின், அஸ்வகோஷ், தலைமீது, ஞானிகள், மதம், பெருமான், நதியைக், ஜனங்கள், கொண்டு, அக்கரை