வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 200
எதையெடுத்தாலும் ‘சனாதனம்’ அதாவது ஸ்திரமானது- மாற்றமற்றது என்று சொல்லுகிறார்கள். உயிரற்றதற்குத்தான் வளர்ச்சியில்லை.”
“இந்தப் பொங்குதலுக்கு நான்தான் காரணமா, கோஷ்?”
“நீ காரணமாயிருப்பது பாராட்டுதற்குரிய விஷயம் பிரபா. நீ என் கவிதையிலே புதிய ஜீவனையும் புதிய வேகத்தையும் ஊட்டியதோடு மட்டு மல்ல; எனது பார்வையில் புதிய நோக்கைப் புகுத்தி மகத்தான உதவியைச் செய்திருக்கிறாய். நான் அறிவின் சிகரத்தை எட்டி விட்டதாக ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தப்போலிக் கர்வத்திற்குப் பிராமணர்கள் சுலபமாக இரையாகி விடுகிறார்கள். பிராமணர்கள் எண்ண வழக்குகளிலும் (ஸ்மிருதி) ஏட்டுச்சுவடிகளிலுமே அறிவு எல்லையிட்டு அடங்கி இருக்கவில்லை. இவற்றிக்கு வெளியே அது அகண்டமாகப் பரந்திருக்கிறது.”
“நான் ஒரு பெண் பிறவி.”
“பெண்ணாகப் பிறந்ததற்காக மனிதரைத் தாழ்வாக மதிப்பவர்களை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்.”
“மற்றவர்களைக் காட்டிலும் கிரேக்கர்கள் பெண்களுக்கு அதிக மரியாதை செலுத்துகிறார்கள். அவர்கள் குழந்தைகளின்றியே இறந்து விட நேர்ந்தாலும் சரி, ஒரு மனைவி உயிரோடிருக்க மற்றொருத்தியைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது.”
“ஆனால் இந்தப் பிராமணர்கள் நூற்றுக்கணக்கானவர்களைக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்; கேவலம், வரும்படிக்காக, கிரேக்கர்கள் பிராமண
மதத்தைத் தழுவவில்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.”
“புத்த மதத்தைத் தழுவியிருந்தாலும், பூஜைகளுக்காகவும் புரோகிதத்திற்காகவும் பிராமணர்களை அழைக்கவே செய்கிறோம்.”
“அவர்கள் தங்கள் சுயநலத்திற்காகக் கிரேக்கர்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக்கொள்ளும் போது, புரோகிதம் செய்ய ஏன் வரமாட்டார்கள்? மேலும் தட்சணையும் கிடைக்கிறது.”
“உன்னுடைய பிராமணத்துவப் பெருமை உணர்ச்சியைப் போக்குவதற்கு நான் காரணமாய் இருக்கிறேனா?”
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 200, புத்தகங்கள், நான், பிராமணர்கள், கங்கை, பக்கம், மதம், வால்காவிலிருந்து, மதத்தைத், செய்து, கிரேக்கர்கள், கல்யாணம், இந்தப், உலகம், எந்த, சிறந்த, அவர்களின், பலத்தையும், மாறிக்கொண்டே, யாவற்றையும்