வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 199
“ஏனெனில் பௌத்த குடும்பஸ்தர்கள் மற்றக் குடும்பஸ்தர்களோடு சேராமல் தனித்து நின்று வாழ முடியாது. அவர்களுக்குக் குடும்பப்பொறுப்பும் இருக்கிறது.”
“நம் தேசத்தின் கிராமங்கள், நகரங்கள் எங்கும் வசிக்கும் ஜனங்கள் எல்லோரும், கால்காராம் மடத்துப் பிக்ஷு க்களைப் போல வேற்றுமையற்றவர்களாய், குலம், நிறம் முதலிய பிரிவுகளை மறந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”
“உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன், அன்பே; உன் தந்தை ஒரு நாள் தனது தலைப்பாகையை எனது பாதங்களிலே வைத்து, பிரபா!
அஸ்வகோஷை நீ விடுதலை செய்துவிட வேண்டும் என்று கேட்டார்.”
“பைத்தியம், நீ விடுதலை செய்து விட்டால் அவர் தனது புதல்வனை அடைந்துவிட முடியுமா? நீ என்ன சொன்னாய் பிரபா?”
“உங்கள் கருத்தை அஸ்வகோஷு க்குத் தெரிவிக்கிறேன் என்று மட்டும் சொன்னேன்.”
“அந்தபடியே நீ தெரிவித்து விட்டாய். இந்தப் பிராமணர்களின் சூழ்ச்சிகளைப் பார்த்து என் மனம் மிகவும் வெறுப்படைகிறது. வெறுப்பினால் என் உடம்பொல்லாம் எரிகிறது. நாங்கள் வேதத்தையும், சாஸ்திரத்தையும் ஏற்று நடக்கிறோம் என்று ஒருபுறம் சொல்கிறார்கள். ஆனால் அந்த வேதரிஷிகளின் வார்த்தைகளிலிருந்து உதாரணம் காட்டினாலோ, அது இன்றைய பழக்கத்திற்கு ஒத்துவராது என்கிறார்கள். இவர்களின் வேதங்களையும், சாஸ்திரங்களையும் நான் மிகுந்த அக்கறையோடு சிரமப்பட்டுப் படித்து முடித்தேன். அவர்களுடைய கலைகள் யாவையும் கற்றுத் தேர்ந்த பிறகு அந்த வேத சாஸ்திரங்களிலே எதை அவர்கள் ஒப்புக்கொண்டு நடக்கிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் அவர்கள் தங்கள் சுய நலத்தைத்தான் ஒப்புக் கொள்கிறார்கள். வேத ரிஷிகளின் வாக்கியங்களை யாரோ மீறி நடந்ததால்தானே இன்றையப் பழக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று, பழக்கங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அல்லது வேதரிஷிகளின் வாக்கியங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படியின்றிச் சமயம் போல் பேசுவது, கோழைத்தனம், சுயநலம், அயோக்கியத்தனம். ஆனால் இவர்களுக்கு வேண்டியது கொழுத்த கன்றுக்குட்டிகளின் மாமிசமும், தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
தட்சணையும் தானே. அதற்காக அன்னதாதாக்களான அரசர்களும் சேனைத் தலைவர்களும் மகிழ்ச்சியடையக் கூடிய எந்தக் காரியங்களையும் இவர்கள் செய்யத் தயார்.”
“கீழ் ஜாதியார்களென்று இவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏழைகளுக்கு இவர்களின் மதத்திலே சிறிது கூட இடம் கிடையாது.”
“ஆம்; அந்நிய நாட்டிலிருந்து வந்துள்ள கிரேக்கர்கள், சகர்கள், அபீர்கள் முதலியவர்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லி ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் செல்வாக்கும், பணமும் இருந்தது. அவர்களிடமிருந்து பெரிய பெரிய தட்சணைகளும் கிடைக்கக் கூடும். ஆனால்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 199, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, வேண்டும், இவர்களின், தங்கள், நடக்க, பெரிய, வேதரிஷிகளின், பின்பற்றி, விடுதலை, சிறந்த, மறந்து, தனது, பிரபா, அந்த