வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 196
தெரிவிக்கிறேன்” என்று மட்டும் சொன்னாள் பிரபா.
6
பிரபாவும், அஸ்வகோஷு ம் இப்போது இணைபிரியாத் தோழர்களாகி விட்டனர். சரயூ நதிக்கரையாயிருந்தாலும் சரி, உத்தியானவனமாய் இருந்தாலும் சரி, நாட்டியச் சாலையாயினும் சரி, நாடக மேடையாயினும் சரி எந்த இடமாயிருந்தாலும் அங்கு ஒருவரைப் பார்த்தால் மற்றொருவரும் இருப்பார்களென்று நிச்சயம் செய்து கொள்ளலாம். பிரபா சூரியனின் ஒளியைப் போல் அஸ்வகோஷின் இதயத் தாமரையை மலரச் செய்து கொண்டிருந்தாள். பால் போன்று பரந்து கிடக்கும் நிலவொளியிலே, சரயூ நதிக்கரை மணற் பரப்பில் அவர்களை நாள்தோறும் காணலாம். அந்த எழிற் காட்சியிலே லயித்த அவர்கள் வெறும் காதல் பேச்சிலே நேரத்தைப் போக்குவதில்லை. வாழ்க்கை சம்பந்தப்பட்ட எத்தனையோ கம்பீரமான விஷயங்களைப் பற்றி, அந்த இளம் காதலர்கள் தர்க்கம் செய்வார்கள்.
ஒருநாள், சரயூ நதியின் நீல நீரை வெளுக்கச் செய்ய முயன்று கொண்டிருக்கும் நிலவொளியிலே அமர்ந்திருந்த பிரபாவின் அழகிய உருவத்தைத் தன் மனத்திரையிலே சித்திரமாகத் தீட்ட முயன்று கொண்டிருந்தான், அஸ்வகோஷ். திடீரென்று, அவன் முகத்திலே ஒரு பிரகாசம் தோன்றியது. “பிரபா! நீதான் எனது கவிதை. உன்னால் தூண்டப்பட்டே நான் ஊர்வசி வியோக நாடகத்தை எழுதினேன். உன்னுடைய அழகும், அன்பும், நான் எத்தனையோ அழகிய காவியங்களை எழுதக் காரணமாயிருந்தன.
கவிதை என்பது வெறும் மனக் கற்பனையிலே மலர்வதல்ல; சூழ்நிலையின் இயற்கை எழிலால் தூண்டப்பட்டு பொங்கிப் பொழிவது, என்ற தத்துவத்தை உன்னால் நான் இன்று கற்றுக் கொண்டேன்.”
அஸ்வகோஷின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே பிரபா மல்லாந்து படுத்திருந்தாள். அவளுடைய நீண்ட கூந்தல் மணலிலே கிடந்து புரள்வதைப் பார்த்த அஸ்வகோஷ் அவளுடைய தலையைத் தூக்கி மடியிலே வைத்துக் கொண்டான். அவனுடைய முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த பிரபா,
“நான் உன்னுடைய கருத்துரைகளை ஒப்புக்கொள்ளுகிறேன். பரந்து கிடக்கும் இயற்கை அழகால் தூண்டப் பெறாமல், உண்மையில் காவியங்கள் பூர்த்தியாவதில்லை. நானும் உன்னை வருணித்து ஒரு காவியம் செய்திருப்பேன்; உன் பெருமையைப் புகழ்ந்து பாடியிருப்பேன். ஆனால் கவிதை எனக்குக் கைவராத பொருளாகிவிட்டது. நான் அன்றே உன்னிடம் கூறினேன். உன்னுள்ளிருக்கும் இரண்டு அஸ்வகோஷ்களையும் தனித்தனியே பிரித்து விடவேண்டும். அதிலும் கவிஞன் அஸ்வகோஷு க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவன் அகில உலகத்திற்கும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 196, புத்தகங்கள், பிரபா, நான், பக்கம், கவிதை, அஸ்வகோஷு, சரயூ, கங்கை, பிரபாவின், வால்காவிலிருந்து, அவன், அஸ்வகோஷ், அவளுடைய, அழகிய, இயற்கை, உன்னுடைய, உன்னால், நிலவொளியிலே, அஸ்வகோஷின், செய்து, சிறந்த, பரந்து, கிடக்கும், எத்தனையோ, வெறும், அந்த, முயன்று