வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 194
“உன்னால்தான் எனக்குப் புதிய கவிதா சக்தி கிடைத்தது. எனது கவிதைகளிலே புதிய ஜீவனும் புதிய வேகமும் இருப்பதற்கு நீதான் காரணம். ஊர்வசி வியோகக் கவிதையையும், அந்த நாடகத்தையும் எழுதுவதற்கு நீயே தூண்டுகோல், கிரேக்க நாட்டிலிருந்து வந்த நாடகக் கலையை நம் தேசப்பண் பிற்கே மாற்றி, நம் நாட்டுக் கலையாக்கும் சக்தியை நீதான் எனக்கு அளித்தாய் பிரபா! நான் உன்னை எப்படி மறந்துவிட முடியும்!”
“எந்த வழியாகப் பார்த்தாலும், நான் உன்னை நெருங்குவதற்குத் தகுதியற்றவளாகவே தோன்றிற்று. ஒவ்வொன்றாக உனது மேதையையும், ஒப்பற்ற திறமையையும் நான் உணர உணர, எனது நிராசைதான் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சாகேதத்தின் அழகுத் தெய்வங்களான யுவதிகளெல்லாம், உன் பெயரைக்கேட்டு தன்வயமாகும் பொழுது, எனது நம்பிக்கை முற்றிலும் என்னைக் கைவிட்டு விட்டது. மேலும், நீ உயர்குலப் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கேள்விப்பட்டபொழுது, அயர்ந்தே போய்விட்டேன். பிராமணச் சமூகத்திற்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் க்ஷத்திரிய கிரேக்க குலத்தில் நான் பிறந்தவள் என்றாலும், பெண்ணினுடைய தாய் தந்தையர்களின் ஏழு தலைமுறைகளையும் தோண்டித் துருவித் தெளிவேற்படுத்திக் கொள்ளாமல், பெண் கொள்ள மறுக்கும் உயர்குலப் பிராமணக் குடும்பம் என் காதலை
வரவேற்குமென்று நான் கனவு காண முடியுமா?”
உன் மனத்தை இவ்வளவு தூரம் துன்பம் அடையச் செய்வதற்குக் காரணமாயிருந்ததை நினைத்து வருந்துகிறேன். பிரபா!”
“ஆனால் நீ...” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் தொண்டை அடைபட்டு விட்டது.
பிரபாவின் நீர் நிறைந்த கண்களிலே அஸ்வகோஷ் முத்தமிட்டான். அவளை அப்படியே தழுவிக் கொண்டு,
“பிரபா! அஸ்வகோஷ் எப்போதுமே உன்னுடையவனே. உன்னிடமிருந்து அவனைக் காலமும் மரணமும் கூடப் பிரிக்க முடியாது.”
பிரபாவின் கண்கள் நீரைப் பெருக்கிக்கொண்டே இருந்தன; அஸ்வகோஷ் அவளைத் தழுவியவாறே கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தான்.
‘ஊர்வசி வியோகம்’ மிக நன்றாக நடிக்கப்பட்டது. சாகேத நகரத்தின் பிரபலஸ்தர்கள் எல்லோரும் நாடகத்திற்கு வந்திருந்தார்கள். நடிப்புக்கலை, இவ்வளவு பூரணத்துவம் பெற்று உயர்நிலையை அடையமுடியுமென்று அவர்கள் கருதியதே இல்லை. கடைசித் திரை விழப்போகும் சமயத்தில், அஸ்வகோஷ் பன்முறைத் திரும்பத்திரும்ப, “நான் கிரேக்க நாடகக் கலையிலிருந்தே இவைகளைக் கடன் வாங்கினேன்” என்று கூறினான். ஆயினும் யாரும் அதை ஓர் அந்நிய நாட்டுக் கலையென்று நம்ப முடியாதபடி அதில் முழுதும் பாரதத்தன்மை நிறைந்திருந்தது.
அஸ்வகோஷினுடைய சமஸ்கிருத, பிராகிருதக் கவிதைகள், சாகேத
நகரத்தையும் கோசல நாட்டு எல்லையையும் தாண்டிப் பரவியது போலவே,
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 194, நான், புத்தகங்கள், அஸ்வகோஷ், எனது, பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, கிரேக்க, உயர்குலப், இவ்வளவு, பிராமணக், பிரபாவின், விட்டது, சாகேத, நாடகக், அப்படியே, சிறந்த, நீதான், நாட்டுக், பிரபா, உன்னை