வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 19
கொண்டாள்; மற்றொன்றை பதினான்கு வயதுடைய சிறிய பையனின், வாயில் வைத்தாள். மற்றவர்கள் அந்த மிருகங்களின் சமீபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். மெதுவான பாகங்களை வெட்டி வெட்டி அந்தத் துண்டுகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்துக்கொண்டு வருகிறாள். இந்த விதமாக, ஒரு பிராணியின் மெதுவான பாகம் தீர்ந்து, அடுத்த மிருகத்தின் உடலில் தன் ஆயுதத்தைப் பிரயோகிக்கிறாள். இந்த நேரத்தில் பதினாறு வயதுடைய இளையவள், கொஞ்சம் விலகிப்போய், சிறிது பனித்துண்டையெடுத்து வாயில் போட்டுக் கொள்கிறாள். அதேசமயம் ஆடவர்களில் பெரியவனும், அவளுக்குச் சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக்கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகிவிட்டாள். இறுகத் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச் சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில், பனிக்கட்டிகளைக் கையில் ஏந்திக் கொண்டு அவர்களிருவரும் கூட்டத்துக்குத் திரும்ப வந்தனர். இருவருடைய கன்னங்களும், கண்களும் இப்போது அதிகமாகச் சிவந்திருக்கின்றன.
அந்தப் பெரியவன் “அம்மா, நான் அறுக்கிறேன்; நீ ரொம்பக்களைத்துப் போய் விட்டாய்” என்றான்.
அவனிடம் கத்தியைக் கொடுத்த தாய் குனிந்து, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களில் இருபத்தி நான்கு வயதுடைய ஆடவனின் முகத்தில்
முத்தமிட்டு விட்டு அவனுடைய கைகளைப் பற்றினாள். உடனே இருவரும் வெளியில் சென்று விட்டார்கள்.
மூன்று பிராணிகளின் ஈரல்களையும் மெதுவான மாமிசத் துண்டங்களையும் யாவரும் தின்றுவிட்டனர். நான்கு மாதங்களாக ஒரே நித்திரையில் ஆழ்ந்திருந்த அந்த மிருகங்களினிடம் ஈரல் எங்கே இருக்கப் போகிறது? ஆனாலும் அந்தச் சிறிய குட்டிக் கரடியினுடைய மாமிசம் மிருதுவாகவும் ருசியாகவும் இருந்திருக்குமல்லவா? கூடிய மட்டும் மாமிசத் துண்டுகளைத் தின்ற அவர்கள், இளைப்பாறுவதற்காக அந்த இடத்திலேயே சிறிது படுத்துப் புரண்டனர்.
இனி அவர்கள் தங்கள் வீட்டுக்கு-ஆம், குகைக்குச் செல்ல வேண்டும். பெரிய கரடிகள் ஒவ்வொன்றினுடைய நான்கு கால்களையும் தோல் கயிற்றினால் சேர்த்துக்கட்டி, அவற்றினூடே கம்புகளைக் கொடுத்து ஒவ்வொன்றுக்கும் இரண்டு பேர் வீதம் நான்கு ஆடவரும் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டார்கள். குட்டியை ஒரு பெண் தூக்கிக் கொண்டாள். தாய் தன்னுடைய ஆயுதங்களைக் கையிலேந்தியவளாய் முன்னே செல்ல, மற்றவர்களும் அவளைத் தொடர்ந்தனர். அந்த மாக்கள்(காட்டு மனிதர்கள்) அப்போது என்ன நேரம் எத்தனை மணி இருக்கும் என்பதை அறியமாட்டார்கள். ஆனால், “இன்று நல்ல நிலவாயிருக்கும்” என்பது மாத்திரம் அவர்களுக்குத் தெரியும். இப்போது சூரியனுடைய ஒளி ரொம்பவும் குறைந்து விட்டது. அப்பொழுதுதான்
அஸ்தமித்துக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 19, புத்தகங்கள், நான்கு, அந்த, பக்கம், மெதுவான, சிறிய, சென்று, சிறிது, கொஞ்சம், வயதுடைய, கங்கை, வால்காவிலிருந்து, அவள், வாயில், தூக்கிக், தாய், மாமிசத், தங்கள், இப்போது, செல்ல, வெட்டி, என்ன, சிறந்த, நல்ல, நேரத்தில், தன்னுடைய, உடனே