வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 18
வளைந்து செல்கிறது; வெளிச்சமும் குறைவு; நான்கு புறத்தையும், பூமியையும் உற்றுக் கூர்ந்து கவனித்துச் செல்லும் அவளுடைய கண்களுக்கு, வெளிச்சம் குறைந்து விட்டதும் சிரமத்தைக் கொடுக்குமல்லவா? கொஞ்சம் நின்று நிதானித்துக் கண்களைச் சரிப்படுத்திக்கொண்ட அவள் இப்போது மேலும் மெதுவாக, அடியெடுத்து வைத்துச் செல்கிறாள்; கொஞ்ச தூரம் சென்றவுடன் அவள் என்ன கண்டாள்? மூன்று கரடிகள்-ஆண், பெண், அவற்றின் குட்டி ஆக உருப்படி மூன்றும் தலைகளைப் பூமியில் புதைத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றன, இறந்து கிடப்பவை போன்று, ஏனெனில், உயிரோடிருக்கின்றன என்பதற்கான எந்த அடையாளத்தையும் காணோம்.
மெதுவாக அடியெடுத்து வைத்துத் திரும்பி வரும் அவளுடைய முகத்தோற்றத்தைப் பாருங்கள்! நெஞ்சிலே பொங்கி வரும் ஆனந்தத்தை வெளியே காண்பிக்கிறதல்லவா? அதிலும் ஒருவிதப் பீதி கலந்திருக்கிறது; ஆம், தூங்கிக் கொண்டிருக்கும் அந்த துஷ்ட மிருகங்கள் விழித்துக் கொண்டால்?
வரவையெதிர்பார்த்து வெளியே காத்து நின்ற இவளுடைய பரிவாரம், இவளின் முகத்தோற்றத்திலிருந்து, தங்களுடைய உழைப்புக்கு ஊதியம் கிட்டி விட்டதாய்த் தெரிந்து கொண்டனர். வந்த அவளும் தன்னுடைய கையை நீட்டி அதில் மூன்று விரல்களைக் காட்டினாள்.
இவளோடு, பெரியவன், அவனுக்கு அடுத்தவன் இருவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களை எச்சரிக்கையாகத் தாங்கிக் கொண்டு தாய்க்குப் பின்னே திரும்பவும் குகைக்குள் அடி மேல் அடி வைத்து ஒருவர் பின் ஒருவராய்ச்
செல்கின்றனர். கூர்மையான நீண்ட தடிகளை வலக் கரங்களில் பிடித்துக் கொண்டு, தாய் ஆண் கரடியையும் பெரியவன் பெண் கரடியையும், இளையவன் குட்டியையும் நெருங்கினர். மறு வினாடி அவர்களின் கூரிய ஆயுதங்கள் கரடிகளின் இருதயத்தில் பாய்ந்தன. ஆனால் பாவம், அந்த மிருகங்கள் தங்கள் உடம்பைக்கூட அசைக்கவே இல்லை. அவைகளின் ஆறுமாதப் பனிக்கால நித்திரை கலைவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் பாக்கி இருக்கிறது! ஆயுதபாணிகளான இவர்கள் அதைக் கவனிக்க முடியுமா? முன் ஜாக்கிரதையாகத்தானே அவர்கள் காரியம் செய்ய வேண்டும். வேகமாகப் பாய்ச்சிய ஆயுதங்களை இப்படியும் அப்படியுமாக நாலைந்து தடவை அசைத்தார்கள். ஏன்? அந்தப் பிராணிகள் உயிருடன் விழித்துக் கொண்டால் ஆபத்தல்லவா? இப்போது பயம் தீர்ந்து விட்டது. அவர்கள் தங்கள் பிராணிகளின் முன்னங்கால்களையும், முகத்தையும் சேர்த்துப் பிடித்து இழுத்து வாசலுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். எல்லோருடைய முகத்தையும் பாருங்களேன். என்ன ஆனந்தம்! எவ்வளவு சந்தோஷம்! ஒரே ஆரவார சப்தம்!
தாய், தன் உடம்பில் கட்டப்பட்டிருக்கும் தோலுக்குள்ளிருந்து ஒரு கத்தியை எடுத்தாள். அது கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும் கல். அதைக் கொண்டு பெரிய கரடியின் வயிற்றுப் பாகத்தைக் கிழிக்கிறாள். கிழிப்பதோ கரடியின் தோலை; ஆயுதமோ கல். அது எவ்வளவு கூர்மையாயிருந்தால்தான்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 18, புத்தகங்கள், கொண்டு, தங்கள், அடியெடுத்து, பக்கம், மெதுவாக, அவள், கங்கை, வால்காவிலிருந்து, இப்போது, விழித்துக், பெரியவன், கொண்டால், ஆயுதங்களை, முகத்தையும், எவ்வளவு, கரடியின், மிருகங்கள், அதைக், தாய், கரடியையும், மேல், பெண், தூரம், சென்றவுடன், கொஞ்ச, வைத்து, சிறந்த, கொஞ்சம், அவளுடைய, வெளியே, வரும், மூன்று, என்ன, அந்த