வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 17
முன்னே வழிகூட்டிச் செல்லும் அந்தப் பெண்ணுக்கு வயது நாற்பதுக்கு மேல் ஐம்பதுக்குள்ளிருக்கும். திறந்திருக்கும் அவளுடைய புஜத்தைப் பார்த்தாலே அவள் நல்ல சரீரக்கட்டு உடையவள் என்பது தெரிகிறதல்லவா? இவளுடைய தலைரோமம், முகச்சாயல், ஏன் ஒவ்வோர் அங்கமுங்கூட, அந்த
குகையிலே பார்த்த இரண்டு யுவதிகளையும் ஒத்திருக்கிறதல்லவா? ஆனால் இவள் கொஞ்சம் பருமன், பருவத்திலும் மூப்பு. இடது கையில் நீண்ட கூர்மையான கம்பு; வலது கையில் தோலிலே நன்றாகத் தீட்டிக் கூர்மையாக்கப்பட்ட கல்-அம்பு. இவளுக்குப் பின்னே, நான்கு ஆடவர்களும், இரண்டு பெண்களும் செல்கின்றனர்.
ஆடவர்களில் ஒருவன் பெரியவளுக்குக் கொஞ்சம் அதிகமான வயதுடையவனாயிருக்கிறான். ஏனையோர்களுக்கு, பதினான்கிலிருந்து இருபத்தாறு வயதுவரை இருக்கும். பெரியவனுடைய முகச்சாயல், ரோமம், அங்கங்கள் எல்லாம் அந்தப் பெரியவளுடைய தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. சரீரக்கட்டிலும் அவளைப் போலவே பலவான்தான். அதே மாதிரி ஆயுதங்களே அவனுடைய கைகளிலும் இருக்கின்றன. பாக்கி மூன்று ஆடவர்களுடைய தோற்றம், புஜபலம் இவனை ஒத்திருந்தாலும், இவனைப் பார்க்கிலும் அதிக இளமையாயிருக்கிறார்கள். வயதிலும் வித்தியாசம். அதே ஆயுதங்கள்தான் இவர்கள் கைகளிலுமிருக்கின்றன. பெண்கள் இருவரில் ஒருத்திக்கு இருபத்திரண்டு வயதிருக்கும். மற்றொருத்திக்குப் பதினாறு வயதிருக்கும். முன்னமே நாம் குகையில் அந்தக் கிழவியைப் பார்த்திருக்கிறோமல்லவா? நம்முடைய மனக்கண் முன்னே, அவளுடைய முகச்சாயலோடு இவர்கள் எல்லோருடைய தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர்கள் யாவரும் ஒரே குடும்பத்தவர்தான் என்று நிச்சயிக்க முடிகிறதல்லவா?
ஆயுதம் ஏந்திய கைகள், வேகமான நடை, பெரியவள் முன்னே செல்ல, அவளைத் தொடர்ந்து ஏனையோர் செல்லும் முறை இவைகளைக் கவனிக்கும் நமக்கு இவர்கள் ஏதோ யுத்தத்தை நாடிப் போகிறவர்கள் மாதிரித் தெரிகிறது. நாமும் தொடர்ந்தே செல்வோம், வாருங்கள்.
தலைமை தாங்கி முன்னே போகும் பெரியவள், (இனி அவளைத் தாய் என்றே அழைப்போம். தாய் என்பது அந்தக் காலத்தில் குடும்பத் தலைவியைக் குறிக்கும்) இப்போது பள்ளத்தாக்கில் இறங்கி இடதுபக்கம் திரும்பி நடக்கிறாள். மற்ற யாவரும் அவளைத் தொடர்கின்றனர். அவளுடைய
கால்கள் மெதுவாகத் தேய்த்துத் தேய்த்துச் செல்கின்றன. தோல்களைக் கட்டியிருப்பதால் காலடிச் சப்தம் கூடக் கேட்கவில்லை இப்போது. அவர்கள் தொடர்ந்திருக்கும் சிறிய மலைக் கூட்டங்களின் மீது செல்கிறார்கள். அதே மெதுவான நடை; கைகளாலும் அந்த மலைகளைத் தொட்டுத் தொட்டுக் கொண்டு நடக்கிறார்கள். வெகுதூரம் வளைந்தும், சுற்றியும் வந்த அவர்களுடைய பயணமும் முடிந்து விட்டதா என்ன? அவர்கள் ஏன் நிற்கிறார்கள்? குகை! இதைத் தேடியா இவர்கள் இவ்வளவு தூரம் வந்தார்கள்? இதுதான் இவர்களுடைய வசிப்பிடமா? இல்லை, இல்லை. குகையின் வாசலில் பனி படர்ந்திருக்கும் பூமியைக் குனிந்து உற்று உற்று நோக்குகிறாள் அந்தத் தாய். எந்த ஒரு அடையாளமும் தென்பட
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 17, புத்தகங்கள், இவர்கள், முன்னே, தாய், அவளுடைய, பக்கம், அவளைத், கொஞ்சம், வால்காவிலிருந்து, கங்கை, அந்தக், பெரியவள், யாவரும், இப்போது, உற்று, இல்லை, வயதிருக்கும், முகச்சாயல், செல்லும், வாருங்கள், சிறந்த, அந்தப், என்பது, இரண்டு, அந்த, கையில்