வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 169
“எனக்கு என்ன நோய் என்பது ஹிந்து வைத்தியருக்குத் தெரியும். என்னுடைய நோய் குணமாகிவிட்டது. அப்படித்தானே வைத்தியரே?”
“வைத்தியரே! நீங்கள் நோயைச் சரியாகக் கண்டு பிடிக்கிறீர்கள். மற்றவர்கள் இருக்கிறார்களே, கழுதைகள், நீங்கள் சொல்கிறபடியே நான் நடந்துகொள்வேன். ரோஸனா!”
உடனே அந்த யுவதி பக்கத்திலே வந்து, “அம்மா!” என்றாள்.
“உன் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன? கண்ணே! அந்த வைத்தியர்கள் இதுவரை என்னைக் கொன்றே இருப்பார்கள். ஆனால், இனிப் பயப்பட வேண்டியதில்லை. இந்த ஹிந்து வைத்தியரை நம்முடைய கடவுள் அஹுமஜ்தாவே அனுப்பியிருக்கிறார். அவருக்கு எந்தக் குறைவும் இல்லாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். வைத்தியர் கூறுகிறபடி, என்னுடைய பத்தியங்களை நீயே தயாரித்துக் கொடு.”
வைத்தியன், ரோஸனாவிடம் அரசிக்குக் கொடுக்க வேண்டிய பத்தியத்தைப் பற்றித் தெரிவித்துவிட்டு வெளியில் வந்தான். அரசனுடைய முகம் சந்தோஷத்தால் மலர்ந்திருந்தது. மருந்துகள் வைத்து மடிக்கப்பட்டிருந்த சில பொட்டலங்களை அரசனிடம் கொடுத்த வைத்தியன் தன்னுடைய வாசஸ்தலத்திற்குப் போவதற்கு ஆயத்தமானான். அதைப் பார்த்த அரசன்.
“தாங்கள் எங்களோடு இங்கேயே தங்கியிருக்க வேண்டும்.”
“ஆனால் அரச சபையின் சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது, அரசே!” “ஆயினும் மனிதனாக வாழ்வதற்குரிய வழிகளைத் தாங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். சம்பிரதாயங்கள் தேசத்திற்குத் தேசம் மாறுபட்டிருக்கும்.”
“என்னுடைய நடவடிக்கையால், தங்களது வேலையாட்களுக்குச் சிரமமாயிருக்கலாம்.
“உங்கள் வைத்தியர்கள் நோயைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நான் இரண்டு மணி நேரம் தாமதித்து வந்திருந்தால் நிலைமை கை கடந்து போயிருக்கும். இப்பொழுது வியாதி முற்றிலும் தீர்ந்துவிட்டதென்று நீங்கள் நம்பலாம்.”
அரசனுடைய வேண்டுகோளுக்கிணங்க வைத்தியனும் அங்கேயே ஒரு தனி அறையில் தங்கினான்.
நான்காவது தினத்திலிருந்து அரசி எழுந்து நடமாடத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் அவளுடைய முகத்தில் ஜீவக்களை அதிகரித்துக் கொண்டு வந்தது. எல்லோரையும்விட, அதிக மகிழ்ச்சியடைந்தவள் ரோஸனாதான். மறுநாளே அரசனால் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளை எடுத்துவந்து அவற்றைத் தன் கையாலேயே வைத்தியனுக்குக் கொடுத்தாள். அந்த ஜரிகைக் கரையிட்ட ஆடைகளிலே காட்சியளித்த வைத்தியன், பிச்சைக் காரர்களுக்கு மத்தியிலே உட்கார்ந்து தர்பூஜாப் பழத்தைத் தின்று கொண்டிருந்த
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 169, புத்தகங்கள், வைத்தியன், பக்கம், வால்காவிலிருந்து, அந்த, நீங்கள், கங்கை, வைத்தியர்கள், அரசனுடைய, சம்பிரதாயங்கள், என்னுடைய, சிறந்த, நோய், ஹிந்து, நோயைச், நான்