வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 164
“நண்ப! நானும் உன்னைப் போலவே ஒரு காலத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் சிறிய சிறிய ஜன ஆட்சிகளினுடைய யுகம் முடிந்துவிட்டது. பெரிய ஜன ஆட்சிகளையோ, சங்கங்களையோ அமைப்பது வெறும் கனவு. ஆகையால், காலத்தின் தேவைக்கேற்ப சரியானதைச் செய்ய வேண்டுமென்று நான் கருதுகிறேன். நல்லது, நீ இப்பொழுது மேற்கே கிளம்பப் போகிறாயா?”
“ஆம் முதலில் பாரசீகர்களுடைய தேசத்திற்கு; பிறகு முடிந்தால் கிரேக்க நாட்டையும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நம்மைப் போலவே கிரேக்க நாட்டிலும், ஜன ஆட்சிகள் இருக்கின்றனவாம். அந்த ஆட்சிகள் இந்தச் சக்திசாலிகளான தாரையோஷையும் அவனது முன்னோர்களையும் அவர்கள் விரும்பியவாறு வெற்றியடைய முடியாதபடி எப்படித் தடுத்தன என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அங்குள்ள நிலைமையை நேரில் பார்க்க விரும்புகிறேன்.”
“நல்லது நண்ப! நானும் கிளம்புகிறேன். கிழக்கே சென்று அகில பாரதத்தையும் ஒன்று சேர்க்கும் சக்தி மகதத்திற்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். புறப்படும் நாம் - கல்வி கற்றுத் தேர்ந்த நாம், பணம்
சம்பாதிப்பதிலும் குடும்பத்தைக் காப்பாற்றுவதிலும் காலத்தைச் செலவிடாமல் இந்தக் காரியத்தைச் செய்து முடிப்போம். நண்ப! நீ வைத்திய சாஸ்திரத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறாய். நானும் அதைக் கற்றுக் கொள்ளவில்லையே என்று வருத்தப்படுகிறேன். பிரயாணம் செய்பவர்களுக்கு அது மிகவும் உபயோகமான கலை.”
“ஆனால், நீதான் சோதிட சாஸ்திரத்தையும், குடில நீதியையும் கற்றுக் கொண்டிருக்கிறாயே!”
“உனக்குத் தெரியும். அவைகள் பொய்க் கலைகள்.”
“விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கு, பொய்யையும் மெய்யையும் பற்றிக் கவலை கிடையாது என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு எது தேவையோ, அதுதான் சரி.”
ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடிய நாகதத்தக்காப்பியனுக்கும், விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கும் மாணவ வாழ்க்கையின் கடைசிச் சந்திப்பு அது. பலமுறை பாரசீகர்களின் தாக்குதலுக்கு உள்ளான தட்சசீலத்தின் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதற்காக இருவரும் தங்கள் தங்கள் கருத்துகளுக்கு ஏற்ற முறையில் வழி கண்டுபிடிக்க முயன்றார்கள்.
2
நாலா பக்கமும் மரங்களோ செடி கொடிகளோ காண முடியாத வறண்ட குன்றுகள்: பசுமையைத் தேடி கண்கள் அலையும் பாலைவனம். புல் பூண்டே இல்லாத அந்தப் பாலை வெளியின் ஓரத்தில் இருந்த பாதையிலே
எப்பொழுதும் ஜன நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. பிரயாணிகளும் அவர்களுடைய மிருகங்களும் தங்குவதற்காக அங்கங்கே பிரயாண விடுதிகள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 164, புத்தகங்கள், பக்கம், விரும்புகிறேன், கற்றுக், நானும், பார்க்க, கங்கை, வால்காவிலிருந்து, நாம், தங்கள், சாஸ்திரத்தையும், நண்ப, தெரியும், ஆட்சிகள், சிறிய, கிரேக்க, சிறந்த, வேண்டும், போலவே