வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 149
3
கோசல நாட்டின் தலைநகரான ஸிராவஸ்தியில் ராஜா பிரசேன ஜித்தன் தன்னுடைய நண்பன் பந்துல மல்லனை வெகு ஆடம்பரமாக வரவேற்றான். தட்ச சீலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான் சிம்மாசனம் ஏறியதும் பந்துலன் சேனாதிபதியாக வந்துவிட வேண்டுமென்று பிரசேன ஜித்தன் அடிக்கடி கூறுவான். அதேபோல் தான் அரசன் ஆனதும், பந்துலனுக்கு அடிக்கடி ஓலையும் அனுப்பினான். ஆனால் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமடைந்திருந்த கோசலம் போன்ற ராஜ்யத்தின் சேனாதிபதியாவதைப் பார்க்கிலும், மிகச் சிறிய ஜன ஆட்சியான தனது குசீனாராவின் உபசேனாதிபதி யாவதையே பந்துலன் மிகுதியும் விரும்பினான். ஆனால் குசீனாரா அவனை அலட்சியப்படுத்தி விட்டது. ஆகையால் பிரசேனஜித்தனின் வேண்டுகோளைப் பந்துலன் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. இருந்தாலும் சில நிபந்தனைகளைப் போட விரும்பினான்.
“நண்ப! உன்னுடைய விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு.”
“நண்ப! பந்துல்! என்ன நிபந்தனை? சந்தோஷமாகச் சொல்.”
“நான் ஒரு மல்ல புத்திரன்.”
“எனக்கு அது தெரியும். மல்லர்களுக்கு விரோதமாகப் போகும்படி ஒரு பொழுதும் உனக்கு நான் கட்டளையிட மாட்டேன்.”
“இவ்வளவு போதும்.”
“நண்ப பந்துல்! நமக்கும் மல்லர்களுக்கும் இடையே இப்போதிருக்கும் சிநேகப் பான்மையையே நிலைநிறுத்த விரும்புகிறேன். மேலும், ராஜ்யத்தை விஸ்தரிக்க வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாதென்பது உனக்கும் தெரியும். ஒரு கால் மல்லர்களுக்கு விரோதமாகப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின், அந்தச் சமயம் நீ விரும்பும் தரப்பில் சேர்ந்து கொள்வதற்கு உனக்கு முழு உரிமையும் உண்டு, போதுமல்லவா? என்னுடைய பிரிய நண்பனுக்கு வேறு ஏதேனும் தேவையாயிருந்தால் தெரிவிக்கலாமா?”
“இல்லை அரசே! இவ்வளவு போதும்!”
4
பந்துலமல்லன் கோசல தேசத்தின் சேனாதிபதியாகி விட்டான். உற்சாகம் குன்றிய அரசன் பிரசேனஜித்தனுக்கு ஒரு பொறுப்புள்ள - திறமை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 149, புத்தகங்கள், பக்கம், வால்காவிலிருந்து, பந்துலன், கங்கை, “நண்ப, பந்துல், நான், உண்டு, விரோதமாகப், போதும், உனக்கு, மல்லர்களுக்கு, தெரியும், அடிக்கடி, கோசல, தங்கள், சிறந்த, பிரசேன, ஜித்தன், அரசன், தான், விரும்பினான்