வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 150
ஸிராவஸ்தியை அடைந்த சில மாதங்களுக்குப் பிறகு மல்லிகா கருத்தரித்திருப்பதின் அறிகுறிகள் தோன்றின. கர்ப்பவதியாய் இருக்கும் மனைவியின் ஆசையைத் தெரிந்து பூர்த்தி செய்ய வேண்டியது புருஷனின் கடமை என்று கருதிய பந்துலன் ஒரு நாள்,
“மல்லிகா! உனக்கு ஏதாவது நிறைவேற வேண்டிய ஆசை இருக்கிறதா?” என்று கேட்டான்.
“ஆம்; ஒரு விருப்பம் உண்டு. ஆனால் பந்துல்! அது நிறைவேறுவது கடினம்.”
“மல்லிகா! பந்துலனுக்கு அசாத்தியமானது எதுவுமில்லை. உன் விருப்பமென்ன சொல்லு.”
“அபிஷேக புஷ்கரிணியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.”
“மல்லர்களுடைய புஷ்கரிணியிலா?”
“இல்லை; வைசாலியில் உள்ள லிச்சவியர்களுடைய புஷ்கரிணியில்.”
“நீ கூறியது உண்மை. உன் விருப்பம் அசாத்தியமானது தான். ஆயினும், உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய பந்துலனால் முடியும் மல்லிகா! நாளைக் காலையில் நாம் இருவரும் ரதத்தில் கிளம்புவோம்.”
மறுநாள் வழியில் ஆகாரத்திற்கு வேண்டிய பொருள்களுடன், வில்- அம்பு, வாள் முதலிய ஆயுதங்கள் சகிதம் பந்துல மல்லனும் மல்லிகாவும் ரதத்திலே புறப்பட்டனர்.
அநேக வாரங்கள் தொடர்ந்து பிரயாணம் செய்தபின் முடிவில் ஒருநாள்
பந்துலனின் ரதம் வைசாலியின் வாயிலை அடைந்தது. சில லிச்சவியர்களின் பொறாமையினால் கண்களை இழந்தவனும், பந்துலனின் தோழனுமான மஹாலி என்பவன்தான், அந்த வாயிலுக்குக் காவல் தலைவனாக இருந்தான். மஹாலியைச் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் பந்துலனுக்கு ஏற்பட்டதானாலும், தான் வந்திருக்கும் காரியத்திற்கு அதனால் பங்கம் ஏற்படக்கூடுமென்று கருதி, அந்த விருப்பத்தைக் கை விட்டான்.
அபிஷேக புஷ்கரிணிப் படித்துறைகளிலே பலமான காவல் உண்டு. 999 அங்கத்தினர்களைக் கொண்ட லிச்சவியர்களின் ஜன ஆட்சி சபையில், காலியான ஸ்தானத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தினனுக்கு மட்டும் அதுவும் அவனது வாழ்க்கையில் அந்த ஒரே ஒரு முறை புஷ்கரிணியில் அபிஷேகம் (ஸ்நானம்) செய்வதற்குரிய பாக்கியம் கிடைக்கும். காவலாளர்கள் தடுத்தனர். பந்துலன் சவுக்கால் அடித்து அவர்களை விரட்டினான். மல்லிகா ஸ்நானத்தை முடித்துக்கொண்டாள். உடனே ரதமேறி இருவரும் வைசாலியை
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 150, புத்தகங்கள், புஷ்கரிணியில், செய்ய, பக்கம், விருப்பம், அந்த, மல்லிகா, வால்காவிலிருந்து, பந்துலன், கங்கை, தான், ஸ்நானம், இருவரும், லிச்சவியர்களின், காவல், பந்துலனின், வேண்டிய, பாக்கியம், சிறந்த, பூர்த்தி, “மல்லிகா, பந்துலனுக்கு, உண்டு, அசாத்தியமானது