வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 148
“ஆம்; குசீனாராவிற்கு பந்துலமல்லன் தேவை இல்லை.”
”அப்படியானால் எங்கே போக உத்தேசம்?”
“மல்லிகா! நீ என்னுடன் வருவாயா?” - பந்துலனுடைய முகத்தில் ஆவல் நிறைந்திருந்தது.
“நிழலைப் போல் உன்னைத் தொடர்வேன். பந்துல். “மல்லிகா பந்துலனுடைய சிவந்த கண்களை முத்தமிட்டாள். உடனே அவனது தயக்கம் விடை பெற்றுக் கொண்டது.
மல்லிகாவினுடைய கரங்களை, தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்ட பந்துலன்,
“இந்தக் கரங்கள் தான் என் சக்தியின் ஊற்று. இந்தக் கரங்கள்தான் என்னுடைய பலத்தின் பிறப்பிடம். மெல்லிய இந்தக் கரங்களைப் பெற்ற பந்துலன் எந்தயிடமாயிருந்தாலும் நிர்ப்பயமாகச் சஞ்சரிப்பான்.”
“பந்துல்! எங்கே போவதற்கு நிச்சயித்திருக்கிறாய்? எப்பொழுது புறப்பட வேண்டும்?”
“இனிமேல் ஒரு கணமும் தாமதிக்கக்கூடாது. ஏனென்றால், முளைகளில் இரும்புக் கம்பிகள் வைத்துப் பொருத்தப்பட்டிருக்கும் விஷயம். சிறிது
நேரத்தில் சமூகத் தலைவருக்கும் எட்டிவிடும். அப்பால் பரீட்சைக்கு மற்றுமொரு தினம் குறிப்பிட விரும்புவார்கள். ஜனங்களுடைய விருப்பத்தையும் மீற முடியாது. ஆகையால் உடனே இங்கிருந்து கிளம்பி விடுவதுதான் நல்லது.”
“நடந்திருக்கும் அநியாயம் - சூழ்ச்சி அம்பலத்திற்கு வருவதை நீ ஏன் தடுக்க வேண்டும்?”
“குசீனரோ என்னைப் பற்றித் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்துவிட்டது மல்லிகா! எனக்கு இனி மேல் இங்கு வேலையில்லை குறைந்தபட்சம் இந்த சமயத்தில் நான் தேவை இல்லை. குசீனாராவுக்குப் பந்துலனின் சேவை தேவை இருக்கும்பொழுது அவன் எங்கிருந்தாலும் சரியே, உடனே இங்கு வந்து விடுவான்.”
அதே நாள் இரவு, அவசியமாகத் தேவையுள்ள சாமான்களுடன் பந்துலனும் மல்லிகாவும், தாங்கள் பிறந்து வளர்ந்த பூமியைவிட்டுப் பயணமாயினர்; மறுநாள் அசிரவதி (தப்தி) நதிக்கரையில் உள்ள பிராமணர்கள் வசிக்கும் மல்லக் கிராமத்தை (கோரக்பூர் பிரதேசம்) அடைந்தனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் சாங்க்ருத்யப் பிராமணர்கள் தங்கள் யுத்த வித்தையின் நிபுணத்துவத்தால், மல்ல சமூகத்திலே மிகுந்த பேர் பெற்றிருந்தார்கள். அவர்களிலே பந்துலனுக்கு நண்பர்களும் இருந்தார்களாயினும், நண்பர்களைத் தேடியா அவன் வந்திருக்கிறான்? இங்கிருந்து ஸிராவஸ்தி*செல்வது அவன் உத்தேசம்.
____________________________________________________
* ஸிராவஸ்தி - வடகோசத்தில் கங்கைக் கரையின் மீதிருந்த ஒரு
புராதன நகரம். இப்பொழுது இது ஸகேத - மஹேதம் என்று அழைக்கப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 148, புத்தகங்கள், அவன், உடனே, பக்கம், இந்தக், தேவை, வால்காவிலிருந்து, கங்கை, இங்கிருந்து, வேண்டும், பிராமணர்கள், வசிக்கும், இங்கு, “மல்லிகா, இல்லை, சிறந்த, எங்கே, உத்தேசம், பந்துலனுடைய, பந்துலன்