வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 131
“ஓஹோ! பிரம்மாவைத் தாண்டிப் பிர்மம்வரை பறப்பதைப் பற்றிச் சொல்கிறாயா? லோபா! அது அரச காரியங்களுக்கு அப்பாற்பட்ட வேலையல்ல. அரச ஆட்சிக்குத் துணைபலமாக நிற்பதற்காகவே நமது முன்னோர்கள் வசிட்டர், விசுவாமித்திரர் முதலிய மகரிஷிகளுக்கு, மிகுந்த மரியாதையும், தானங்களும் கொடுத்தார்கள். அந்த மகரிஷிகள் இந்திரன், அக்னி, வருணன் முதலிய தெய்வங்களின் பெயரால், மக்களை அரசன் உத்திரவுக்குக் கீழ்ப் படியும்படி தூண்டினார்கள். அக்காலத்து அரசர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஏராளமான செலவு செய்து இந்தத் தெய்வங்களின் பெயரால் வேள்விகளை நடத்தினார்கள். இன்றும் நாம் வேள்விகளை நடத்துகிறோம். பிராமணர்களுக்குத் தானம், தட்சிணை எல்லாம் கொடுக்கிறோம். தெய்வங்களின் மகத்தான சக்திகளின் மீது மக்களுக்கு
நம்பிக்கை உண்டாக்குவதற்காகவும், அந்தத் தெய்வங்களின் கிருபையினாலேயே நாம் இந்த சுகபோகத்தை -இளங்கன்றின் மிருதுவான மாமிசம், மது, மெல்லிய ஆடைகள், முத்து ரத்தின ஆபரணங்கள் இவைகளையெல்லாம் உபயோகிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டாவதற்காகவுமே இவைகளைச் செய்கிறோம்.”
“அதற்கு இந்தப் பழைய தெய்வங்கள் போதாதா? இப்பொழுது ஒரு புதிய பிர்மத்தைச் சிருஷ்டிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?”
“பல தலைமுறைகளிலே யாரும் இந்திரன், வருணன், பிரம்மா முதலிய தெய்வங்களைப் பார்த்ததில்லை. இப்பொழுது பலருடைய மனத்திலே இது பற்றிச் சந்தேகமும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.”
“அப்படியானால், உன்னுடைய பிரமத்தைப் பற்றிச் சந்தேகம் உண்டாகாதா?”
“பிர்மத்தைப் பார்க்கவேண்டும் என்று யாரும் கேட்க முடியாதபடி அதை நான் சிருஷ்டித்திருக்கிறேன். ஆகாயவெளியைப் போல எங்கும் நிறைந்திருப்பது, புலன்களால் உணரமுடியாதது பிர்மம் என்று நாம் கூறியிருக்கும்போது, அதைப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி, எங்கிருந்து வரும்? அந்தக் கேள்வி, உருவங்கள் கற்பிக்கப்பட்டிருக்கும் தெய்வங்களைப் பற்றித்தான் எழ முடியும்.”
“ஆனால், ஆகாயத்தைப் பற்றியும் அகண்ட வெளியைப்பற்றியும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் உத்தாலக், ஆருனி போன்ற மகா மேதாவிகளுக்கும்
உபதேசம் செய்து கொண்டிருக்கிறாயே, அவையெல்லாம் உன் பிரஜைகளை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிதானா?”
“லோபா! நீ என்னை நன்றாயறிவாய். உன்னிடத்திலிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. சந்தேகத்தைக் கிளப்புகிறவர்களின் மனத்தைக் கலக்கி, அவர்களின் புத்தியை மழுங்கிப் போகும்படி செய்வது, நமது அரச வாழ்வை நிலைநிறுத்துவதற்கு மிக அவசியமாயிருக்கிறது. தேவதைகளைப் பற்றியும் அவர்களுக்குச் செய்யப்படும் வேள்வி பூஜைகளைப் பற்றியும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 131, புத்தகங்கள், தெய்வங்களின், பக்கம், முதலிய, பற்றிச், நாம், வால்காவிலிருந்து, கங்கை, பற்றியும், மக்களுக்கு, நம்பிக்கை, யாரும், கேள்வி, நான், தெய்வங்களைப், வேள்விகளை, இப்பொழுது, இந்திரன், கொண்டிருக்கிறாயே, காரியங்களுக்கு, “அப்படியானால், சிறந்த, என்ன, அவசியம், பெயரால், வருணன், நமது, செய்து