வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 129
“ஏனெனில் நமக்குள்ளேயும் இரண்டு மாறுபட்ட கருத்துக்களின் போராட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது; நாமும் அவற்றைச் சகித்துக் கொள்கிறோம். ஏனென்றால், அவை நம் மனத்திலிருந்து பிரித்தெடுக்கபட்ட முடியாதவை.”
“ஆம். நீயும் என்னிலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஓர் அங்கம், லோபா!”
2
“ஷிவியிலிருந்து வந்துள்ள மென்மையான சால்வைகள், காசி வாசனைச் சந்தனம், கடலின் வெண்முத்தால் செய்த ஆபரணங்கள், இவைகளை நீ விரும்பி உபயோகிப்பதை நான் பார்க்கவே முடியவில்லையே, அன்பே! இவைகளின் மீது உனக்கு வெறுப்பா என்ன!”
“ஏன்? அவைகளை உபயோகிப்பதால் என் அழகு அதிகரித்து விடுமா?”
“எனக்கு நீ எப்பொழுதும் அழகுத் தெய்வம்தான்.”
“அப்படியானால் இந்தச் சுமைகளை எல்லாம் அள்ளிப் போட்டுச் சரீரத்தைத் துன்புறுத்துவதிலே என்ன லாபம்? உண்மையைச் சொல்லுகிறேன், அன்பே! நீ உன் தலைமீது மகுடம் என்ற பெயரால் இந்தப் பெரிய சுமையை வைத்துக் கொள்வதைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு எரிச்சலாகத்தான் வருகிறது.”
“ஆனால் மற்றப் பெண்கள் ஆடைக்காகவும், ஆபரணங்களுக்காகவும்
உயிரையே விடுகிறார்களே.”
“நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.”
“ஆம்; நீ பாஞ்சால அரசனின் இருதயத்திலே ஆட்சி செய்யும் பெண்.”
“இல்லை. நான் பாஞ்சாலத்தின் அரசி அல்ல. பிரவாஹனின் மனைவி.”
“ஆம். என் அன்பே! நாம் இதைப்பற்றிக் கற்பனை கூடச் செய்ததில்லை. நான் பாஞ்சாலத்தின் ராஜகுமாரன் என்பதை மாமா முற்றிலும் மறைத்து வைத்திருந்தார்.”
“அந்தச் சந்தர்ப்பத்தில் தந்தையார் வேறு என்ன செய்யமுடியும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 129, புத்தகங்கள், நான், அன்பே, என்ன, பக்கம், “ஆம், கங்கை, வால்காவிலிருந்து, பாஞ்சாலத்தின், அல்ல, பெண், எப்பொழுதும், சிறந்த