வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 128
பெண்களுக்கும் என்ன வேலை கொடுப்பதென்று எனக்குப் புரியவில்லை.”
“விற்றுவிடு லோபா! அவர்கள் யுவதிகள்; ஒவ்வொருத்தியையும் குறைந்தது முப்பது தங்க நாணயங்களுக்கு விற்கலாம்.”
“வருந்தத்தக்க விஷயம்! நாம் பிராமணர்கள்; மற்றவர்களை விட அதிகமாகப் படித்திருக்கிறோம். அறிவாளிகளாயிருக்கிறோம். அறிவையும் கல்வியையும் பெறுவதற்கு நமக்குப் போதுமான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இந்த அடிமைகளின் வாழ்க்கைகளைப் பார்க்கும் போது பிரம்மா, இந்திரன், வருணன் முதலிய தேவர்களின் மீதும் வசிட்டன், பரத்துவாஜன், பிருகு, அங்கிரா முதலிய மகரிஷிகளின் மீதும், என் தந்தையாரைப் போன்று அறிவின் சிகரமாய் விளங்கும் பணக்காரப் பிராமண அறிஞர்கள் மீதும் எனக்கு வெறுப்புத்தான் ஏற்படுகிறது. இந்தப் படித்த பிராமணர்களிடையே வியாபார மனப்பான்மைதான் காணப்படுகிறது. எப்பொழுதும் ஆசை, லாபம், பேரம் இவற்றிலேதான் மூழ்கிக் கிடக்கிறார்கள். அன்று வேலைக்காரி கருப்பியின் புருஷனை கோசல வியாபாரியிடம் தகப்பனார் ஐம்பது தங்க நாணயங்களுக்கு விற்றுவிட்டார். கருப்பி என் பக்கத்தில் அழுது நடுங்கிக் கொண்டிருந்தாள். நான் தகப்பனாருக்கு எவ்வளவோ சொன்னேன். எல்லா அடிமைகளையும் வீட்டிலே வைத்துக் கொள்வதென்றால் வீட்டிலே இடம் கூட இருக்காது. மேலும் விற்றுப் பணமாக்க முடியாத அந்த அடிமைகள், இருந்தும் பயனென்ன என்று கூறிவிட்டார். பாவம், அவர்களைப் பிரித்த அந்தக் காட்சி! கருப்பியின் இரண்டு வயதுப் பெண் அன்று பூராவும் அழுது அழுது ஓய்ந்தது. அந்தச் சின்னக்
குழந்தையைப் பார்த்தவர்களெல்லோரும் அது என் தகப்பனாரைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார்கள்; நாம் மிருகங்களைப் போலவே அவளை விற்றுவிட்டோம். அந்த அடிமைகளையும் அவர்களது குழந்தைகளையும் பிரம்மா இதற்காகவேதான் படைக்கிறாரா? இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது பிரவாஹன்! உன்னைப் போல் நான் மூன்று வேதங்களையும் உருப்போட்டிருக்கவில்லை. ஆயினும் அவற்றின் கருத்தைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவைகள் கண்ணுக்குத் தெரியாத பொருள்களையும் சக்திகளையும் பற்றிப் பிரமாதமாகப் பேசி, மக்களுக்குப் பயமூட்டுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.
லோபாவினுடைய சிவந்த கன்னங்களைத் தனது கன்னங்களிலே ஒத்திக்கொண்டே பிரவாஹன் “லோபா! நமது காதல் அபிப்பிராய பேதத்தை வளர்ப்பதற்காகவே தோன்றியிருக்கிறது.”
“நம்முடைய கருத்து வேற்றுமை காதலை வளப்படுத்துமே தவிரக் குறையச் செய்யமாட்டாது.”
“சரியாகச் சொன்னாய் லோபா! நீ கூறிய அந்த வார்த்தையை வேறு யாராவது கூறியிருந்தால், நான் சீற்றம் கொண்ட நாகமாக மாறியிருப்பேன். ஆனால் உன்னுடைய இந்த அழகிய உதடுகள், நமது தெய்வங்களையும், மகரிஷிகளையும் ஆச்சாரியர்களையும் கடுமையாகத் தாக்கியபொழுது, அந்தச் சிவந்த உதடுகளை முத்தமிட வேண்டுமென்ற ஆசை தான் எனக்குத்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 128, புத்தகங்கள், நான், மீதும், பக்கம், வால்காவிலிருந்து, வீட்டிலே, கங்கை, அழுது, அந்த, அடிமைகளையும், பிரவாஹன், நமது, சிவந்த, கருப்பியின், போலவே, அந்தச், பிரம்மா, மூன்று, போதுமான, சிறந்த, லோபா, தங்க, முதலிய, நாம், நாணயங்களுக்கு, அன்று