வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 110
வயலில் கதிர் அறுப்பு, அடிப்பு, தான்யத்தைப் பிரித்தல் முதலிய வேலைகள் ஒன்றரை மாதம் வரை நடைபெற்றன. ஆனால் இங்கு வந்த
இரண்டே வாரங்களில் சுதாஸ் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி செழுமையடைந்து விட்டான். அவனுடைய பெரிய நீலக்கண்கள் பிரகாசமடைந்திருந்தன. கன்னங்கள் சிவந்திருந்தன. நரம்புகளும் எலும்புகளும் சதைக் கோளங்களுக்குள் மறைந்துவிட்டன. வந்த ஒரு வாரத்தில் ஜேதா அவனுக்குப் புதிய ஆடைகளும் கொடுத்திருந்தான்.
ஜேதா, அபாலா, சுதாஸ், இன்னும் இரண்டொரு வேலையாட்கள் தவிர, ஏனையோர் யாவரும் தங்கள் தங்கள் கூலிக்காகத் தானியத்தைப் பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர். இவர்களுக்கு நிலங்கள் குறைவு. ஆகையால் தங்கள் சொந்தக் கதிர் அறுப்பு, அடிப்பு வேலைகளைக் காலா காலத்தில் முடித்துவிட்டு, இங்கு ஜேதாவின் நிலங்களில் வேலை செய்யவந்தார்கள். ஜேதா, அபாலா இவர்களின் அன்பிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட சுதாஸ் மெது மெதுவாக அவர்களுடன் நெருங்கிப் பழகிவிட்டான். ஏன்? அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களில் இவனும் ஒருவனாகவே ஆகிவிட்டான் என்று சொல்ல வேண்டும். ஒருநாள் மாலை வேளையில் யாவரும் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபொழுது, கிழக்குப் பகுதியைப் பற்றிய பேச்சை ஜேதா ஆரம்பித்தான்; அபாலாவும் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சுதா, நான் கிழக்கே வெகு தூரம் சென்றது கிடையாது. ஆனால் பாஞ்சாலபுரத்தை (அகிச்சத்திரம்) நான் பார்த்திருக்கிறேன். குளிர்காலத்தில் என்னுடைய குதிரைகளை விற்பதற்காக அங்கே சென்றிருந்தேன்.”
“பாஞ்சாலம் (ரஹில்கண்டு) உங்களுக்கு எப்படி இருந்தது?”
“தேசத்தில் ஒன்றும் குற்றமில்லை. மத்ரர்களைப் போல அந்த ஜனங்களும் ஆரோக்கியமுள்ளவர்களாகவும், நல்லவர்களாகவும் இருக்கிறார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 110, புத்தகங்கள், தங்கள், சுதாஸ், ஜேதா, பக்கம், பற்றிய, அபாலா, யாவரும், பெரிய, கங்கை, வால்காவிலிருந்து, அந்த, சிறந்த, இங்கு, அடிப்பு, வந்த, சுத்தம், நான், அறுப்பு, கதிர், அவனுடைய, கேட்டுக், பக்கத்திலே, சென்று, விட்டான், வீட்டுக்குப்