வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 109
மாதிரியான சாதாரண உடை, செம்பட்டை மயிர், சிவந்த மேனி உடையவர்களாய் இருந்தனர். யுவதி தண்ணீர்ப் பையையும், வாளியையும் விரிக்கப்பட்டிருந்த ஒரு தோலின் மேல் வைத்துவிட்டு, அறுபது வயது நிரம்பிய ஆனால் ஆரோக்கியமும் திடசரீரமும் உள்ள ஒரு பெரியவரிடம் போய், “அப்பா! இந்த அந்நிய தேசத்து வாலிபன் இங்கு வேலை செய்ய விரும்புகிறார்” என்றாள்.
“குழந்தாய்! வயலிலே நம்மிடம் வேலை செய்வாரா?”
“ஆம், எந்த வேலையானாலும்!”
“அப்படியானால் செய்யட்டும். மற்றவர்களுக்கு என்ன கூலி கிடைக்கிறதோ அது அவருக்கும் கிடைக்கும்!”
“வாலிபன் இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். விருத்தன் வாலிபனிடமும் இதே விஷயங்களைத் திரும்பவும் கூறினான். யுவனும் அதற்குச் சம்மதித்தான். மேலும் அந்த விருத்தன் அவனைப் பார்த்து,
“நாங்கள் யாவரும் மத்தியான போஜனம் சாப்பிடப் போகிறோம். நீயும் கலந்து கொள்ளலாம், வா” என்று அழைத்தான்.
“இல்லை, ஆரிய விருத்தரே! இப்போதுதான் தங்கள் புத்திரி எனக்கு மாவும் தயிரும் கொடுத்தாள்.”
“ஆரியனுமல்ல, வீரியனுமல்ல, என் பெயர் ஜேதா, திருபு புத்திரன். உன்னால் முடிந்த அளவு சாப்பிடலாம்; அபாலா! இவருக்குச் சிறிது அஸ்வினி மது கொண்டு வந்து கொடு. வாலிப! வெயிலுக்கு இது ரொம்ப நல்லது.
உன்னுடைய மற்ற விஷயங்களை சாயங்காலம் பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது உன் பெயரை மாத்திரம் தெரிந்து கொள்ளலாமா?”
“சுதாஸ் - பாஞ்சாலன்.”
“சுதாஸ் என்று கூறாமல் சுதா என்று கூறு. (சுதா - அழகிய தானம் கொடுப்பவன்) உனக்குக் கிழக்குப் பிரதேசப் பாஷையும் கூடச் சரியாகப் பேச வராதென்றே நினைக்கிறேன். சரி, பாஞ்சாலத்திலிருந்தா வருகிறாய்? ரொம்பச் சந்தோஷம். அபாலா! மிகவும் கூச்சமுள்ள ஆசாமியாய்த் தெரிகிறது. நன்றாக இவருக்குச் சாப்பாடு போட்டுக் கவனித்துக் கொள்ளவேண்டும்.”
சுதாஸ், அபாலா கொடுத்த மதுவையும் அருந்திச் சில ரொட்டிகளையும் புசித்தான். இரண்டு தினங்களாக ஆகாரத்தையே பாராதிருந்ததால், அவனுடைய பசி மந்தித்துப் போய்விட்டது. சூரியனுடைய வெப்பம் குறையக் குறைய அவனுடைய சரீரத்தில் புது ஊக்கமும், ஆர்வமும் உண்டாகி விட்டது. மாலையில் யாவரும் வேலையை விடுவதற்கு முன்னே கோதுமைக் கதிர் அறுப்பதில் யாருக்கும் அவன் இளைத்தவனல்ல என்பதையும் நிரூபித்தான்.
இரவில் யாவரும் கோதுமைக் கதிர்கள் அடுக்கப்படும் களத்திலுள்ள வீட்டிற்குச் சென்றனர். அங்கு கூடியிருந்த இருநூற்றுக்கு அதிகமான நபர்களிலிருந்து ஜேதாவின் நிலம் மிகப் பெரியதென்பது தெரிய வந்தது. அங்கு சமையல் வேலை செய்வோர் ஏற்கெனவே தங்கள் வேலைகளைத் தொடங்கி விட்டிருந்தனர். ஒரு பெரிய எருதைக் கொண்டு அதனுடைய
மாமிசம், எலும்பு
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 109, புத்தகங்கள், யாவரும், அபாலா, பக்கம், வேலை, வால்காவிலிருந்து, கங்கை, சுதா, அவனுடைய, கோதுமைக், “சுதாஸ், அங்கு, தங்கள், சிறந்த, விருத்தன், இவருக்குச், கொண்டு