வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 104
இதே கருத்தோடு ஒருநாள் வருணனும் பாலமத்திரனும், தென் சௌவீரபுரத்திற்குப் படகிலே புறப்பட்டனர். காந்தார வியாரிபாரிகளைப் போல் உடை தரித்திருந்த அவர்கள் அந்த அசுர நகரத்தை அடைந்தபோது, அது ஆரியர்கள் வசிக்கும் பிரதேசமாகத் தோன்றவில்லை. முற்றிலும் அசுரர்களுடைய நகரமாகவே காட்சியளித்தது. நகரத்தின் கடைவீதிகளில் எங்கு நோக்கினும் பெரிய பெரிய அசுர வியாபாரிகளுடைய மாளிகைகளையும் எல்லா வியாபாரமும் அவர்களுடைய ஆதீனத்திலேயே இருப்பதையும் கண்டனர்.
எத்தனையோ அசுர சேனாதிபதிகள், முன் போலவே தங்கள் தங்கள் மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்தனர்; அவர்களுக்குப் பக்கத்தில் அடிமைகள் முன்போலவே கைகட்டி வாய் பொத்தி நின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த நண்பர்களுக்கு வெற்றி கொண்ட ஆரியர்களது வாசனையைக் கூட இந்நகரத்தில் காணோமே என்ற சந்தேகம் உண்டானதில் ஆச்சரியம் இல்லையல்லவா? சுமத்திரன், அசுர அரசனுடைய மாளிகையில் வசித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் காந்தார நகரத்து வியாபாரி என்ற தோரணையில் சுமத்திரனைப் பேட்டி காண வருணன் தன் நண்பன் பாலமத்ரனை அனுப்பினான். திரும்பி வந்த பாலமத்ரன் “செம்பட்டை மயிரையும் சிவந்த மேனியையும் தவிர, அசுர அரசனுக்கும் சுமத்திரனுக்கும் வேறு வேற்றுமை இல்லை; அவனுடைய மாளிகை ஓர் ஆரிய சேனாதிபதி வசிக்கும் சாதாரண வீடல்ல; தங்கமும், வெள்ளியும் ஜொலிக்கும் அசுர தர்பாராகவே இருக்கிறது. அவனை அண்டியிருக்கும் ஆரிய வீரர்களுடைய பழக்க வழக்கங்களும் இது மாதிரியே” என்று சொன்னான்.
நண்பர்கள் இருவரும் அங்கு ஒரு வாரம் தங்கினர். சுமத்திரனைப் பற்றியும் அவனுடைய படைவீரர்களைப் பற்றியும் மேன்மேலும் தகவல்களைத் தெரிந்துகொண்டனர். இந்நகரை வெற்றிகொண்ட ஆரியர்களை அசுர நகரங்களில் நடன சாலைகளிலும், மதுபான ஸ்தலங்களிலுமே பார்க்க முடிந்தது. எத்தனையோ ஆரிய நங்கையர் தங்கள் நாயகர்களிடம் வந்து சேர விரும்பியும், அவர்களை ஏதாவது சாக்குக் கூறி இங்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். சுமத்திரனுடைய மனைவிகூடப் பல முறை தூதனுப்பியும்,
ஏதோ பொய்க் காரணங்கள் கூறித் தடுத்துவிட்டான் சுமத்திரன். ஓர் அசுர புரோகிதனுடைய கன்னிகையின் மோகத்தில் சிக்கி இருந்தான். அது மட்டுமா? எத்தனையோ அசுர அழகிகள், ஆசை நாயகிகளாக அவனுடைய அந்தப்புரத்தில் நிறைந்திருந்தனர். தன்னுடைய படை வீரர்களுக்கும் இந்த உரிமையை அளித்திருந்தான். வெளியே இருந்து ஆரியர்கள் யாரேனும் பிரவேசித்தால், அடிமைகளைக் கொண்டு தொல்லை விளைவிக்கச் செய்து அவர்கள் இங்கு வராமலே தடுத்து விட்டான். இந்த விபரங்களை எல்லாம் சாங்கோபமாகத் தெரிந்து கொண்ட வருணன், தன் நண்பனுடன் திரும்பவும் சௌவீரபுரத்திற்கு வந்து சேர்ந்தான்.
அவன் ஜனத் தலைவர்களைச் சந்தித்து, சுமத்திரன் தனது பலத்தை மிகவும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறானென்பதையும், அவனை எதிர்ப்பதாயிருந்தால் அவனுடைய ஆரியப் போர் வீரர்களை மட்டுமல்ல, அசுரர்களின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 104, அசுர, புத்தகங்கள், அவனுடைய, ஆரிய, தங்கள், பக்கம், வால்காவிலிருந்து, சுமத்திரன், கங்கை, வருணன், எத்தனையோ, பற்றியும், வந்து, இங்கு, அவனை, பெரிய, காந்தார, சிறந்த, ஆரியர்கள், வசிக்கும், கொண்ட, சுமத்திரனைப்