வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 103
சௌவீர புரத்தில் வெயிலின் கொடுமை சகிக்க முடியாததாய் இருந்தது. நமது நண்பர்களை இந்த வெப்பம் அதிகமாகப் பாதித்தது; ஆரியர்களிடையே இன்னும் எழுத்துக்குறி (லிபி) தோன்றவில்லையாகையால், வருணன் தன் நண்பர்களுக்கு அவ்வப்போது வியாபாரிகள் மூலம் சொல்லியனுப்பிய செய்திகள் சரியாகப் போய்ச் சேரவில்லை. அப்படிச் சங்கடமான சமயங்களிலெல்லாம் அசுரர்களுடைய எழுத்துக்களைப் பற்றி வருணன்
யோசிப்பான். சௌவீரபுரத்தை அடைந்ததும் அங்குள்ள நிலைமைகள் வெகுதூரம் முற்றி இருப்பது வருணனுக்குத் தெரியவந்தது. சௌவீர புரத்தில் சேனாதிபதி சுமத்திரனை ஆதரிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆனால் தென் சௌவீரப் பகுதியிலோ அந்தக் கடைசி அசுர நகரத்தைக் கைப்பற்றிய சேனைத் தலைவன் சுமத்திரனை ஆதரிக்கும் ஆரியர்கள் நிறைய இருந்தனர். அசுரர்களின் கடைசி நகரத்தின் மீது வெற்றி கொண்டபோது, சேனாதிபதி சுமத்திரன் அசுரர்களிடம் அவசியத்துக்கும் அதிகமான கருணை செலுத்தினான். அந்தக் காலத்தில் இவனுடைய கருணை செலுத்தும் மனப்பான்மையைப் பார்த்த வருணன், சுமத்திரனைப் போற்றிப் புகழ்ந்ததுண்டு. ஆனால் இப்பொழுது சுமத்திரனுடைய அந்தச் செய்கை ஒரு கபட நாடகம் என்பது தெரிய வந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு அசுரர்கள் இனித் தலையெடுத்து ஆரியர்களை எதிர்க்க முடியாது என்று கருதிய சுமத்திரன், இப்பொழுது தயவு காட்டினால் நன்றியறிதலுள்ள அசுரர்களின் சொத்தையும் பலத்தையும் தனது சுயநலத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
இப்பொழுதுங்கூட சுமத்திரன் தன் சேனைகளோடு சமுத்திரக் கரையிலுள்ள அசுர நகரத்தில் தங்கி இருந்தான். போலி யுத்தத்தின் பொய்க்காரணத்தைச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து திரும்பாமலேயே நாள் கடத்திக் கொண்டிருந்தான். வருணன் சில சாதாரணத் தலைவர்களிடமிருந்து சுமத்திரனுடைய நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பொழுது, அவைகளை முற்றிலும் நம்ப முடியவில்லை. சுமத்திரன் மீதுள்ள தனிப்பட்ட
விரோதத்தால், அவர்கள் இவ்விதம் சொல்லுகிறார்களே என்றும் நினைத்தான். ஆனால் அவன் முக்கியமான தலைவர்களையும் ஜனாபதிகளையும் சந்தித்துப் பேசிய பொழுது, விஷயம் உண்மை என்று தெரிய வந்தது. சுமத்திரனுடைய கெட்ட நோக்கம் முக்கிய தலைவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும், சாதாரண ஜனங்கள் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவர்கள் வேறுவிதமாகவே அர்த்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
இந்த அசுர நகரத்தை வெற்றி கொண்டபோது சேனாதிபதி சுமத்திரனுடைய உபதலைவனாக வருணன் இருந்தான். இப்போது யுத்தம் முடிந்து ஒன்பது வருடங்களாகி விட்டாலுங்கூட, அந்த யுத்தத்தின் போது அவன் நிகழ்த்திய பராக்கிரமச் செயல்களை அங்கு வசிக்கும் ஆரியர்கள் மறந்து விடவில்லை. சுமத்திரனுடைய கெட்ட எண்ணங்களை ஜனங்களுக்கு உணர்த்த
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 103, புத்தகங்கள், வருணன், சுமத்திரனுடைய, சுமத்திரன், அசுர, பக்கம், சேனாதிபதி, கங்கை, வால்காவிலிருந்து, தெரிய, கெட்ட, இப்பொழுது, அவன், வந்தது, பொழுது, கருணை, இருந்தான், நினைத்தான், யுத்தத்தின், ஆரியர்கள், புரத்தில், சௌவீர, செய்து, சிறந்த, சுமத்திரனை, அந்தக், வெற்றி, அசுரர்களின், கடைசி, கொண்டபோது