வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 102
3
சௌவீர புரத்திலிருந்து (கராச்சிக்கு அக்கம் பக்கத்திலுள்ள பிரதேசம்) கவலை தரக்கூடிய எத்தனையோ விஷயங்கள் இங்கு வருணனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்த அசுரர்களுடைய கடைசி நகரம் விழுந்த பின், அங்கு ஆரியர்களுக்குள்ளே ஒரு கலகம் தோன்றப் போகிறது என்பதையே இந்தச் செய்திகள் குறிப்பிடுவனவாயிருந்தன. சௌவீர புரத்துப் பிரச்சினையின் பல அம்சங்கள் பற்றித் தன்னுடைய குரு மகரிஷி அங்கிராவோடு வருணன் பலமுறை விவாதித்திருக்கிறான். இந்தக் கலகம் முதலில் சௌவீரபுர பிரதேசத்தில் தோன்றினாலும் நாளடைவில் பாரதத்தின் ஆரியர்கள் எல்லோரையும் இது பாதிக்கவே செய்யும் என்று ஞானி அங்கிரா கருதினால்; எப்பொழுதும் ஆரியர்கள், தனி மனிதர்களை விட சமூகத்திற்கே ஆட்சி உரிமை உண்டு என்று ஒப்புக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு, அசுர அரசனின் கட்டுப்பாடற்ற ஆதிக்கத்தைப் பார்த்த எத்தனையோ ஆரியத் தலைவர்களுக்கு அதிகாரத்திலும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஆசை உண்டாகியிருக்கலாம். இந்த இரண்டு வித மனோபாவங்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கும். எந்தப் பிரதேசத்தில் அசுரர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அங்கு இந்தப் போராட்டம் அதிகரிக்க வசதி உண்டு. ஏனெனில் தோல்வியுற்ற அசுரர்கள் ஆரியர்களிடையே பிளவை உண்டாக்க விரும்புகிறார்கள்.
வருணனும், பலமத்ரனும் தட்சசீலத்துக்கு வந்து எட்டு வருஷங்கள் ஆகிவிட்டன. தெற்கே சௌவீரபுரத்திலிருந்து (இப்பொழுது ரோடி) மேலும் மேலும் கிடைத்துக் கொண்டிருக்கும் வியாகூலமிக்க செய்திகள் வருணனை காந்தார புரத்தை விட்டுக் கிளப்பும்படி செய்தன. அகதிச் சாலையில் முதலாவது சந்தித்த நண்பனான பாலமத்ரன் அவனோடு கூடவே கிளம்பினான்.
நண்பர்கள் இருவரும் காந்தாரப் பிரதேசத்தின் எல்லையைக் கடந்து உப்பு மலைத் தொடர் உள்ள சிந்துப் பிரதேசத்திற்குள் பிரவேசித்தனர். அங்கு உப்புச் சுரங்கங்களில் அசுர வியாபாரிகளும் தொழிலாளிகளுமே அதிகமாயிருந்தனர்.
அதனால் ஆரியர்களின் நல்ல தன்மைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. ஆரியர்களில் பெரும்பாலோர் சோம்பேறிகளாகி விட்டனர். குதிரையேற்றமும் வாள்வீச்சும்தான் தங்களுடைய வேலை என்ற எண்ணங்கூட அவர்களுக்கு உண்டாகிவிட்டது. ஆரியரல்லாதவரிடம் அசுரர்களைப் போன்ற அதிகாரம் செலுத்த விரும்பும் ஆரியர்கள் அரச பதவியை ஏற்படுத்தும் சூழ்நிலையையும் உண்டாக்கி வந்தார்கள். இந்த உப்புமலைப் பிரதேசத்தைக் கடந்து சௌவீரபுரத்தின் பிரதம ஸ்தானத்தை (மூலஸ்தான-மூல்டான்) அடைந்த போது, வருணனுக்கும் பாலமத்ரனுக்கும் நிலைமைகள் திருப்தியைக் கொடுத்தன. அங்கு வசிப்பவர்கள் யாவரும் ஆரியர்கள். அந்தப் பிரதேசத்தில் உஷ்ணம் அதிகமாயிருந்துங்கூட அதைச் சகித்துக் கொண்டு, ஆரியர்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 102, ஆரியர்கள், புத்தகங்கள், அங்கு, பிரதேசத்தில், பக்கம், வால்காவிலிருந்து, கங்கை, உண்டு, அசுரர்கள், கடந்து, மேலும், அசுர, கலகம், சௌவீர, வேண்டும், எத்தனையோ, கிடைத்துக், சிறந்த, செய்திகள்