சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
ஆமூர் வளமும் உழவர் விருந்தும்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக் குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து |
180 |
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல் வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது கொங்குகவர் நீலச் செங்கட் சேவல் மதிசே ரரவின் மானத் தோன்று |
185 |
மருதஞ் சான்ற மருதத் தண்பணை யந்தண ரருகா வருங்கடி வியனக ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின் |
நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர். அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது. அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது. இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர். அவ்வூருக்கு அகழியும் உண்டு. அங்கு அந்தணர்கள் வருவதில்லை. உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அங்குச் சென்றால்….
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை |
190 |
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத் தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி |
195 |
அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள். அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர். அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும். அவர்கள் உங்களைத் நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர். உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.
நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல்
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக் கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப் பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப |
200 |
நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர் சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே |
நல்லியக்கோடனின் மாவிலங்கை அந்த ஆமூரிலிருந்து அதிக தொலைவிலுள்ளது அன்று. பக்கத்தில்தான் உள்ளது. மாவிலங்கைப் பேரூரில் எப்போதும் நல்லியக்கோடனின் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நிகழும். விழாக் காலங்களில் தெருவில் புழுதி அடங்குவதற்காக நீர் தெளிப்பர்.அதன் மீது யானைகள் நடப்பதால் புழுதிகள் மேலும் அடங்கும். அத்தெருவில் நடக்கும் யானைகள் எப்படிப் பட்டவை தெரியுமா! பேய்மகள் போன்றவை. பேயின் நாக்கு எரியும் தீயை இழுத்து வைத்திருப்பது போல இருக்கும். பல் பளிச்சென்று வெளியே தெரியும். காது கருமைநிற வெள்ளாட்டுக் காது போல் இருக்கும். காலடி கவட்டை போல் பிளவுபட்டிருக்கும். காலில் இருக்கும் பெரிய நகங்களால் பிணத்தைக் கிளறி அது உண்ணும். இந்தப் பேய் பிணத்தின் கறியை உண்டு சிரிப்பது போல யானை பிளிறிக்கொண்டு தெருவில் நடக்கும்.
வாயிலின் சிறப்பு
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு மருமறை நாவி னந்தணர்க் காயினுங் கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன |
205 |
அடையா வாயிலவ னருங்கடை குறுகிச் |
நல்லியக்கோடனின் அரணமனை வாயில் எப்போதும் இமயமலை பிளவு பட்டிருபது போல் திறந்தே இருக்கும். என்றாலும் எல்லாரும் எளிதில் உள்ளே சென்றுவிட முடியாது. பொருநர். புலவர் அந்தணர் ஆகி\யோர் மட்டும் தடையின்றி உள்ளே செல்லலாம்.
நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி
அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும
அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு மின்முக முடையையு மினிய னாதலுஞ் செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு |
210 |
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும் வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக் கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு மரியே ருண்க ணரிவைய ரேத்த |
215 |
அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும் வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப் பன்மீ னடுவட் பான்மதி போல இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் |
220 |
பாணர்களே! கோட்டை வாயிலில் நுழைவதற்கு உங்களுக்குத் தடை இல்லை. எனவே உள்ளே சென்றால் நல்லியக்கோடனைக் காணலாம். விண்மீன்களுக்கு இடையே வெண்ணிலா விளங்குவது போல அவள் தன் சுற்றத்தாருக்கு இடையேயும், அவனிடம் பரிசில் பெற்று அவனை வாழ்த்தும் பரிசிலர்களிடையேயும் இருப்பதைக் காணலாம். அவன் எத்தகைய பண்புகளைப் பெற்றவன் தெரியுமா!, செய்ந்நன்றி மறவாதவன். சிற்றினத் தொடர்பு இல்லாதவன். இன்முகம் காட்டுபவன். இனியனாக நடந்து கொள்பவன். சிறப்புகள் குவிந்தாலும் செறிவோடு விளங்குபவன். அறிந்தவர்களின் போற்றுதல்களைப் பெற்றவன். அஞ்சியவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன். அவனிடம் சினம் இருக்கும். அதில் கொடுமை செய்யும் வெஞ்சினம் இருக்காது. அணி செய்து தன்னை அழகுபடுத்திக் கொள்வான். அழிக்க வரும் படையைத் தானே முன்னின்று தாங்குவான். வாளால் புகழ் பெற்ற வயவர்கள் இவனைப் பாராட்டிப் புகழ்வர். எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன். எல்லாரும் ஆசை கொள்ளும் பாங்கு உள்ளவன். நடுவு நிலைமையிலிருந்து பிறழாதவன். நிகழ்ந்ததை உணர்ந்து தீர்ப்பறம் கூறவல்லவன். பெண்கள் புகழும்போது இவன் ஒன்றும் அறியாதவனாக மாறிவிடுவான். பிறரிடம் தன் அறிவாற்றலைப் புலப்படுத்துவான். வரிசை அறிந்து கொடை வழங்குவான். இவ்வளவு தான் தரவேண்டும் என்று வரையறை செய்யாமல் வழங்குவான். அவன் அருகில் சென்று ….
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, இருக்கும், நல்லியக்கோடனின், ஆமூர், போல், இலக்கியங்கள், நடக்கும், சிறுபாணாற்றுப்படை, அவன், உள்ளே, பத்துப்பாட்டு, செய்ந்நன்றி, யானைகள், தெரியுமா, காது, எல்லாரும், ரேத்த, அவனிடம், பெற்றவன், வழங்குவான், காணலாம், பரிசில், தெருவில், படுதலு, வரிசை, மின்மையு, தன்ன, குருவி, மீனைக், அன்று, அங்கு, மிக்க, சங்க, தாமரை, நிலாவைப், இத்தகைய, மூதூர், நாவி, யானை, பெற்ற, அவர்களின், உண்டு, உழவர்கள், எப்போதும்