பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோற் கோள்வல் பாண்மகன் றலைவலித் தியாத்த நெடுங்கழைத் தூண்டி னடுங்கநாண் கொளீஇக் |
285 |
கொடுவா யிரும்பின் மடிதலை புலம்பப் பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை நீர்நணிப் பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம் |
பாண்மகன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பான். மீன்தூண்டிலில் மாட்டுவதற்காகத் தரப்படும் இறைச்சி இரையைத் தோல் பையில் போட்டு அதனைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பான். நீண்ட மூங்கில் கோலின் நுனித்தலையில் மெல்லிய நரம்பு நூலைக் கட்டி அதன் மற்றொரு நுனியில் இரும்பினாலான தூண்டிலைக் கட்டியிருப்பான் தூண்டிலின் இரும்பு தெரியாதபடி பச்சைக் கறி செருகப் பட்டிருக்கும். வாளைமீன் அந்த இறையைக் கவ்வும்.. எனினும் எப்படியோ தப்பிவிடும். தப்பிய வாளைமீன் பிரம்புப் புதருக்குப் பக்கத்தில் செல்லும்போது வளர்ந்திருக்கும் பிரம்பின் நிழலைப் பார்த்து அதனைத் தூண்டிலின் கோல் என்று எண்ணி நடுங்கும்.
நீத்துடை நெருங்கயந் தீப்பட மலர்ந்த கடவு ளொண்பூ வடைத லோம்பி |
290 |
யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை யகலிரு வானத்துக் குறைவி லேய்ப்ப வரக்கிதழ்க் குவளையொடு நீல நீடி முரட்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக் குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர் |
295 |
பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின் |
இத்தகைய தன்மையினைக்கொண்டு அகன்று விரிந்த குளம் ஆழமானது. அக் குளத்தில் தீ எரிவது போலக் கடவுள் ஒண்பூ (செந்தாமரை) மலர்ந்திருக்கும். பிரம்பு நிழலைக் கண்டு நடுங்கிய வாளைமீன் கடவுள் ஒண்பூவின் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக விலகிச் செல்லும். தன் உறைவிடத்தைத் தாமரையின் பக்கம் அமைத்துக் கொள்ளாமல் செங்குவளை பூத்திருக்கும் பகுதியில் அமைத்துக் கொள்ளும். அரக்கு நிறம் கொண்ட செங்குவளைப் பூவும் நீலம் என்று சொல்லப்படும் நீலப்பூவும் நீர் மட்டம் வரையில் ஓங்கி உயர்ந்து சிவப்பு, பச்சை (இலை), நீலம் என்றெல்லாம் முரண்பட்ட நிறங்களில் அந்த முதுநீர்ப் பொய்கையில் தழைத்திருக்கும். நாண் இல்லாத குறைவில் (குறைந்திருக்கும் வில்) தான் வானவில். பொய்கையில் பூத்திருக்கும் அந்தப் பூக்கள் முழுமையாகத் தோன்றாமல் அறைகுறையாகத் துண்டுபட்டிருக்கும் வானவில் போலத் தோன்றும். பொய்கையைத் தூய்மை செய்வோர் அப் பூக்களைக் களைந்து கரையில் எறிவர். கரையில் கிடக்கும்போதும் அவை மொட்டு விட்டுப் பூக்கும். அவற்றில் கடவுள் பூவாகிய தாமரையை விடுத்து ஏனையவற்றை நல்லநாள் பெரியநாள் வரும்போது கண்ணியாகவோ, மாலையாகவோ கட்டி அணிந்து கொண்டு செல்லுங்கள்.
அந்தணரது உறைவிடங்களில் பெறுவன
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப் பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர் மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் |
300 |
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற் |
மறைகாப்பாளர் வாழும் இடங்கள் நோன்பு நோற்கும் படிவ நிலையில் கொணப்படும். பருமன் இல்லாத கால் நட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும். அந்தப் பந்தர்க்காலில் பசுவின் கொழுகொழு கன்று கட்டப்பட்டிருக்கும். பந்தலின் கீழே உள்ள தரை பைஞ்சேற்றால் (பசுவின் சாணத்தால்) மெழுகப்பட்டிருக்கும். கோழியோ, நாயோ அங்கு இருக்காது. பந்தலில் உள்ள கூட்டில் வளர்க்கப்படும் வளைந்த வாயினையுடைய கிளிக்கு அவர்கள் தம் மறை மொழிகளைச் சொல்லிப் பயில வைத்துக்கொண்டிருப்பார்கள்.
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ் சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ வயினறிந் தட்ட சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தஞ் |
305 |
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத் துருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து கஞ்சக நறுமுறி யளை இப் பைந்துணர் நெடுமரக் கொக்கின் னறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் |
310 |
மறைகாப்பாளர் வாழும் இடங்களுக்குச் சென்றால் அவர்களின் மனைவியர் நல்கும் உணவைப் பெறலாம். அகன்ற வானத்தின் வடபால் விளங்கும் சாலிமீன் (அருந்ததி விண்மீன் Polaris) அந்த விண்மீன் போன்று நிலைமாறாத இருப்புத் தன்மையைக் கற்பு எனல் தமிழர் கோட்பாடு. இப்படிக் கற்புக்கடம் பூண்ட அந்தணர் சலைக்கும்போது தம் வளையலணிந்த புறங்கைகளால் நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு சமைப்பார்கள். சோற்றுக்கு வத்தல் போட்ட மோர்க்குழம்பு உண்டு. அந்த வத்தல் (வத்தம்) சுடர்க்கடைப் பறவையின் பெயரைக் கொண்டது. (கோழியவரை வத்தல் போலும்) மாதுளையின் பச்சைக் காயைப் பிளந்து வெண்ணெயில் வதக்கிய கறியும் உண்டு. மோரும் வெண்ணெயும் உண்ணத் தருவார்கள்.அவை செவ்விய பசு தந்த பாலைக் காய்ச்சிப் பெறப்பட்டவை. வத்தல் குழம்பிலும், கறிகாயிலும் கஞ்சுகத்தை (கறி வேப்பிலையைக்) கிள்ளிப் போட்டிருப்பார்கள். மாவடு ஊறுகாயும் உண்டு. (மாமரத்துக்குக் கொக்கு என்னும் பெயரும் உண்டு. வடி என்பது வடுவைக் குறிக்கும். நெடுமரக் கொக்கின் நறுவடி என்பது பாடலில் மாவடுவைக் குறிக்கும்.) (காடி என்பது உப்பிட்டுப் புளித்த ஊறுகாய்.) மறைகாப்பாளர் இல்லங்களுக்குச் சென்றால் வகைபடச் (வக்கணையாகச்) சமைக்கப்பட்ட இவற்றை வகையோடு பெறுவீர்கள்.
நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு
வண்ட லாயமொ டுண்டுறைத் தலைஇப் புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை யிரைதேர் மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப் புள்ளார் பெண்ணைப் புலம்புமடற் செல்லாது கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த |
315 |
வேள்வித் தூணத் தசைஇ யவன ரோதிம விளக்கி னுயர்மிசைக் கொண்ட வைகுறு மீனிற் பைபயத் தோன்றும் நீர்ப்பெயற் றெல்லைப் போகிப் பாற்கேழ் |
நீர்ப்பெயற்று என்பது ஓர் ஊர். அவ்வூரிலுள்ள துறையின் புனலில் விளையாடும் மகளிர் விளையாட்டுத் தோழிமாரோடு சேர்ந்து தழுவிக் கொண்டு நீர்த்துறைக்குள்ளே வண்டல் விளையாடி மகிழ்வர். தண்ணீருக்குள் விளையாடும்போது அவர்கள் தங்களது தங்க நகைகளைக் கழற்றிக் கரைகளிலேயே வைத்து விட்டு விளையாடுவர். மணிச்சிரல் என்பது சிச்சிலி என்றும் சொல்லப்படும் அழகிய மீன்கொத்திக் குருவி. கரையில் தங்க நகைகளைப் பார்த்த மீன்கொத்திக் குருவி தனக்கு நல்ல தங்கமீன் இரை கிட்டியது என்று எண்ணி அதன்மீது பாயும். அவை இரை அன்மையால் மருண்டு போய் பக்கத்தில் பல பறவைகள் இருக்கும் புன்னைமர மடலில்கூட உட்காராமல் நெடுந்தூரம் பறந்து செல்லும். அங்கே ஊர்ப் பகுதியில் அந்தணர்கள் வேள்வித் தூண் நட்டு வேதம் ஓதித் தம் கடமைகளைச் செய்துகொண்டிருப்பர். அவர்களின் வேதம் எழுதப் படாதது. வழிவழியாகக் காதால் கேட்டு ஓதப்படுவது. பறந்து சென்ற மீன்கொத்திப் பறவை அவர்கள் நட்ட வேள்வித் தூணின்மேல் சிறிது நேரம் உட்காரும். அது உட்கார்திருப்பதிருப்பதானது அன்ன-விளக்கு போல் தோன்றும். அன்னப் பறவை பொம்மையை உச்சியில் வைத்துச் செய்த குத்து விளக்கை அக்காலத்தில் யவனர் கொண்டுவந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்தனர். வேள்வித் தூணின்மேல் மீன்கொத்திப் பறவை அமர்ந்திருப்பது யவனர் தந்த ஓதிம (அன்ன) விளக்கைப் போலத் தோன்றும். அந்தணர் மிகுதியாக வாழ்ந்த அந்த நீர்ப்பெயற்று ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும். கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரம் நீர்ப்பெயற்று என்னும் பெயருடன் விளங்கியது. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி என்னும் போது முந்நீர் என்னும் தொடரிலுள்ள ‘நீர்’ என்பது கடலை உணர்த்துகிறது. நீர் = கடல். நீர்ப்பெயற்று = கடல்மல்லை நீரின் பெயரைக் கொண்ட பட்டினத்தைப் புலவர் நீர்ப்பெயற்று என்று குறிப்பிடுகிறார். இது எயிற் பட்டினத்தைச் சிறுபாணாற்றுப்படை மதிலொடு பெயரிய … பட்டினம் என்று குறிப்பிடுவது போன்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, நீர்ப்பெயற்று, என்பது, அந்த, என்னும், இலக்கியங்கள், உண்டு, வத்தல், வேள்வித், பொரும்பாணாற்றுப்படை, தோன்றும், பறவை, கொண்டு, மறைகாப்பாளர், கடவுள், கரையில், வாளைமீன், பத்துப்பாட்டு, அவர்களின், அதனைத், போட்டு, குறிக்கும், தந்த, பெயரைக், அந்தணர், தூண்டிலின், கட்டி, பாண்மகன், விண்மீன், தங்க, அன்ன, தூணின்மேல், யவனர், கடல்மல்லை, முந்நீர், மீன்கொத்திப், வேதம், சென்றால், மீன்கொத்திக், குருவி, பறந்து, சங்க, நெடுமரக், நீலம், கொண்ட, சொல்லப்படும், நீர், பொய்கையில், பகுதியில், பூத்திருக்கும், முதுநீர்ப், பக்கம், செல்லும், அமைத்துக், இல்லாத, வானவில், வாழும், பசுவின், உள்ள, சுடர்க்கடைப், பச்சைக், படிவ, அந்தப், போலத், எண்ணி, பக்கத்தில், ரிட்ட