மலைபடுகடாம் - பத்துப்பாட்டு

தலைநாட் பூத்த பொன்னிணர் வேங்கை | 305 |
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல் கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின் ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் |
310 |
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச் சிறுமை யுற்ற களையாப் பூசல் |
பூச்சூடும் பாட்டொலி - மலைநில மக்கள் வேங்கைப் பூவை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளும்போது பாடும் பாட்டொலி. யானையின் தழங்கு குரல் - பெண்யானை தன் கன்றைத் தன் உடல் நிழலில் மறைத்து அழைத்துச் சென்றது. அக் கன்றின் தந்தை தன் வலிமையை யெல்லாம் காட்டி யானைக் குட்டியைத் தாக்க வரும் புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. ஆனாலும் புலி யானைக் கன்றைப் பிடித்துவிட்டது. கண்ட யானையின் சுற்றம் முழுமையுமாக ஒன்று சேர்ந்து முழங்கி எழுப்பிய தழங்குகின்ற குரல். மந்தி பூசல் - தாய்க்குரங்கு தன் குட்டியைப் பிடிக்க மறந்து தாவியபோது குட்டி பெரிய பள்ளத்தில் விழுந்து துன்புற்றுக் கத்தியது. மரத்திலிருந்த தளிர்களைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்த குரங்குகள் அதன் துன்பத்தைப் போக்க முடியாமல் பூசலிடும் ஒலி. கட்டிப்போட்டிருக்கும் ஒன்று எழுப்பும் ஒலி
கலைகை யற்ற காண்பின் நெடுவரை | 315 |
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப் பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை அருங்குறும் பெறிந்த கானவர் உவகை திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு |
320 |
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென வான்றோய் மீமிசை அயருங் குரவை நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை |
தேன் எடுக்கும் கொள்ளை ஒலி - ஆண்குரங்கு கூடச் செல்ல முடியாத மலைப்பாறை இடுக்கில் தேனீக்கள் கூடு கட்டி வைத்திருக்கும். கயிற்றின் வழியாக இறங்கி அந்தத் தேனைக் கொள்ளையிடும் கொள்ளையொலி (மால்பு = கயிறு). கானவர் உவகை ஒலி - அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூறையாடும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி. குரவரின் குரவை ஒலி - சூரையாடிக் கொண்டுவந்த பொருள்-விருந்து அரசனுக்குப் போதும் என்று கருதி, போருக்கு எழுந்த நாளில் காலையில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்த குறப்பெண்களுக்கும் அதனை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முழக்கிக் கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி. கல்லிலே மோதி ஓடும் ஆற்றின் இரங்கல் ஒலி - சிறு பருக்கைக்கல் பாதையில் தேர் செல்லும்போது கேட்கும் ஓசைபோல் ஆற்று வெள்ளம் பிளவுப் பாதைகளில் மோதிக்கொண்டு இறங்கும்போது கேட்கும் இரங்கல் ஒலி.
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து | 325 |
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார் விரவுமொழி பயிற்றும் பாக ரோதை ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும் கிளிகடி மகளிர் விளிபடு பூசல் இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு |
330 |
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை |
335 |
யானை பயிற்றும் ஒலி - யானையை நீண்ட பொய்க்குழிக்குள் விழச்செய்து, அதன் சினத்தைத் தணித்துப் பெரிய கயிற்றுச் சங்கிலியில் பிணித்துக் கட்டுவதற்காகப் பாகர் தமிழோடு கலந்த சில பயிற்று மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கும் மொழியொலி. கிளி கடி பூசல் - மூங்கிலில் பாதியைப் பிளந்து செய்த தட்டையை முழக்கிக் கொண்டு தினைப் புனங்களில் மகளிர் கிளிகளை ஓட்டச் சோ …சோ … என்று பாடும் பூசல் ஒலி. நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை - வரையாட்டுக் கடாய் ஒன்று தன் இனத்திலிருந்து பிரிந்து சென்று மற்றோர் இனத்தை வளைத்துப் போட்டு அந்த இனத்திற்குத் தலைவன் ஆவதற்காக அதன் தலைமைக் கடாவோடு மோதிப் போரிட்டுக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த முல்லைநிலக் கோவலர், குறிஞ்சிநிலக் குறவர் ஆகிய இருநில ஆண்களும் ஒன்று கூடி ஆரவாரம் செய்துகொண்டு இரு காளைகளோடும் போரிடும் கம்பலை-ஒலி
காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார் கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் |
340 |
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும் தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும் |
பிணையல் ஓட்டும் ஓசை - உண்டதுபோக மீதமுள்ள பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணையலாகக் கட்டி, அக் கன்றுகளைப் பூத்திருக்கும் காந்தள் கொடிகளால் மெதுவாக அடித்து ஓட்டும்போது சிறுவர்கள் எழுப்பும் ஆரவார ஓசை. கரும்பாலை ஓசை - மழைபோல் கரும்புச்சாறு ஓடும்படிகரும்பாலையில் கரும்பின் கண்ணை உடைக்கும் ஆலை ஓசை. வள்ளைப் பாட்டு - மகளிர் பாடிக்கொண்டு தினை குற்றும் வளையல் தாளப் பாட்டோசை. பன்றிப் பறை - நிலத்தைக் கிண்டி சேம்பினையும், மஞ்சளையும் வீணாக்கும் பன்றியை ஓட்ட அந் நிலம் காப்போர் அடிக்கும் பன்றிப் பறையின் ஓசை. குன்றகச் சிலம்பு - இந்த எல்லா ஓசைகளையும் எதிரொலிக்கும் மலைக்காட்டின் எதிரொலி முழக்கம். இப்படிப் பல கடாம் ஓசைகளைக் கேட்கலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, பூசல், மகளிர், இலக்கியங்கள், ஒன்று, மலைபடுகடாம், கானவர், கம்பலை, குரவை, பத்துப்பாட்டு, பன்றிப், இரங்கல், கொண்டு, முழக்கிக், ஊற்றித், கேட்கும், ரோதை, குன்றகச், கன்றுகளைப், காந்தள், கல்லென், பயிற்றும், ஆரவார, தணித்துப், உவகை, மந்தி, பாட்டொலி, நெடுவரை, கிளையொடு, சங்க, பட்ட, பாடும், யானையின், எழுப்பும், செய்த, பெரிய, சேர்ந்து, குரல், யானைக், கட்டி