மலைபடுகடாம் - பத்துப்பாட்டு
பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட |
அரண்மனை வாயிலில் காணும் பொருள் வளம்
எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்துத் தொழுதி போக வலிந்தகப் பட்ட மடநடை ஆமான் கயமுனிக் குழவி |
500 |
ஊமை எண்கின் குடாவடிக் குருளை மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர் அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த |
505 |
மடக்கண் மரையான் பெருஞ்செவிக் குழவி |
நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம். அவற்றோடு விளையாடித் திளைக்கலாம். ஆமான் – விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் போன்ற பெரிய மான்களின் தொகுதி வேறிடம் சென்ற போது திக்குத் தெரியாமல் நின்றுவிட்ட தனிமான். கயமுனி – குட்டி யானை. எண்கின் குருளை – வட்ட அடியையுடைய வாய் பேசாத கரடிக் குட்டி. வருடை – பிளவு பட்ட அடி கொண்ட மலையாட்டின் கடா. தீர்வை – படமெடுத்தாடும் நல்ல பாம்பைப் பிடித்துண்ணும் கருடன். உழுவை – குகையில் வாழும் புலி. மரையான் – புலியிடம் தப்பிய காட்டுப் பசுவின் கன்று.
அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கிற் பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை வரைப்பொலிந் தியலும் மடக்கண் மஞ்ஞை கானக் கோழிக் கவர்குரற் சேவல் |
510 |
கானப் பலவின் முழவுமருள் பெரும்பழம் இடிக்கலப் பன்ன நறுவடி மாவின் வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் |
நன்னன் அரண்மனைப் பகுதியில் காணும் உயிரினங்களும், கிடைக்கும் உணவுப் பொருள்களும். உடும்பு - அரக்கு போன்ற செம்மண் பரலில் கொடுக்குப் பிடி பிடித்து மேயும் ஆண் உடும்பு. மஞ்ஞை – மலைக்கே அழகு தந்து நடந்தாடும் மடக்கண் மயில். கானக்கோழிச் சேவல் - விட்டிசை தந்து கூவும் காட்டுக் கோழிச் சேவல். இனி வருவன தின்பண்டம். பலாப்பழம், மாம்பழத்தாரம், இனிப்பு மாம்பழத்தில் பிழிந்தெடுத்து வடித்து விளையச் செய்த மாம்பழச்சாறு (இக்காலத்து மாஸா போன்றது) இது இடித்த மாவு போல் இனிப்பது. இனி மீண்டும் மகிழ் பொருள்.
தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி காஅய்க் கொண்ட நுகமரு ணூறை |
515 |
பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி குரூஉப்புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள் நாகந் திலக நறுங்காழ் ஆரம் |
520 |
நன்னன் வாயிலில் கிடந்த செல்வ-வளங்கள். நூறை - தூறலிலேயே செழித்து வளர்ந்து நுகம் போல் கிழங்கு விட்டிருக்கும் வள்ளிக்கிழங்கு. திருமணி - பருத்த பளிங்குகள் போலப் பளிங்குப் பாறைகள் மேல் உதிர்ந்து கிடக்கும் திருமணிகள். யானைத் தந்தம் - வரிப்புலியோடு பொருது புண்பட்ட யானைத் தந்தங்கள். காந்தள் - உடைந்த வளையல்கள் போல் ஊழ்த்தும் உதிர்ந்தும் கிடக்கும் காந்தள் மலர்கள். நாகக்கட்டை, திலகக்கட்டை, வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டை.
கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி திருந்தமை விளைந்த தேக்கள் தேறல் கானிலை எருமைக் கழைபெய் தீந்தயிர் நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல் |
525 |
உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும் குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப நோனாச் செருவி னெடுங்கடைத் துவன்றி |
முற்றத்தில் நிறைந்திருக்கும் பிற. மிளகுக் கொத்து - கருநிறக் கொடியில் காய்த்தது. தேறல் - மூங்கில் குழாயில் விளைய வைத்த கஞ்சிக் கள் (தேன் கள்ளுமாம்). காட்டெருமைத் தயிர் - மூங்கில் குழாயில் பிறை ஊற்றப்பட்டது. தேன் - பாறை இடுக்கில் கட்டிய தேன் கூட்டின் மீது நீல நிற ஓரிக்குரங்கு பாய்ந்து வீழ்த்திய சக்கரம் போன்ற கூட்டுடன் கூடிய தேன்வட்டு. ஆசினி - உடம்புக்குத் தனித் தெம்பைத் தரும் குறும்பலா. இவையும் இவை போன்று குடமலையில் விளைந்த அனைத்துப் பொருள்களும் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. இவை, காவிரியாறு கடலோடு சேருமிடத்தில் (புகார்) கடல் வழியே கொண்டுவரப்பட்ட பண்டங்கள் குவிந்து கிடப்பது போல் குவிந்து கிடந்தன. இவற்றில் எதுவுமே போரில் பெறப்பட்டது அன்று.
முற்றத்தில் நின்று விறலியர் நன்னனைப் போற்றுதல்
வானத் தன்ன வளமலி யானைத் | 530 |
தாதெருத் ததைந்த முற்ற முன்னி |
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள். முற்றத்துக்கு வாருங்கள். அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும். அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்.
மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்பக் கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக் |
535 |
கடவ தறிந்த இன்குரல் விறலியர் தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை |
அம்முற்றத்தில் இருந்துகொண்டு உங்களின் இசைக்கருவிகளை முழக்குங்கள். முழவு இடிபோல் முழங்கட்டும். மூங்கிலில் செய்த கொம்பை ஊதுங்கள். கருங்கோட்டுச் சீறியாழில் மருதப் பண்ணை எழுப்புங்கள். அப்போது யாழ் நரம்பின் பண்ணிசைக்கு ஏற்ப, விறலியர் பாடட்டும். ஆடட்டும். தொன்று தொட்டு இருந்துவரும் மரபுமுறை வழுவாமல் கடவுளை வாழ்த்திய பின்னர் அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மலைபடுகடாம் - பத்துப்பாட்டு, போல், இலக்கியங்கள், மடக்கண், காந்தள், சேவல், நன்னன், மலைபடுகடாம், தன்ன, யானை, விளைந்த, யானைத், கிடக்கும், தேன், வாயிலில், விறலியர், பத்துப்பாட்டு, பொருள்களும், குவிந்து, குழாயில், உடும்பு, முற்றத்தில், ஆசினி, திருமணி, மூங்கில், தந்து, செய்த, தேறல், போலப், வளம், பட்ட, ஆமான், பொருள், காணும், சங்க, வருத்தம், அரண்மனை, குழவி, எண்கின், உழுவை, மரையான், குட்டி, தீர்வை, வருடை, குருளை, கொண்ட, கொடுந்தாள், மஞ்ஞை