மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின் மாஅத் தாள் உயர் மருப்பிற் கடுஞ் சினத்த களிறு பரப்பி விரி கடல் வியன் றானையொட |
180 |
முரு குறழப் பகைத்தலைச் சென்று அகல் விசும்பின் ஆர்ப் பிமிழப் பெய லுறழக் கணை சிதறிப் பல புரவி நீ றுகைப்ப வளை நரல வயி ரார்ப்பப் |
185 |
பீ டழியக் கடந் தட்டவர் நா டழியக் எயில் வெளவிச் சுற்ற மொடு தூ வறுத்தலிற் செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி |
190 |
செழியன் முதுபொழிலை முற்றுகையிட்டான். (அம் முற்றுகையின் போது எப்படித் தாக்கினான் என்பது இங்குக் கூறப்படுகிறது) முரசை முழக்கினான். யானைப்படையைப் பரவலாக நிறுத்தினான். கடல் போன்ற காலாள் படையுடன் சென்று தாக்கினான். முருகனைப் போல் மோதினான். போர் முழக்கம் வானில் எதிரொலித்தது. வெயிலின் கதிர்கள் போல் அம்புகள் பாய்ந்தன. போர்க்குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தன. சங்கு ஊதினர். கொம்பு ஊதினர். பகையரசரின் பெருமை அழிந்தது. நாடு அழிந்து போனதால் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். பகை நாட்டு மக்களின் சுற்றத்தார்கூட அழிந்து போயினர். எதிர்த்துப் போரிட்ட பகைவர் செழியனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். இவ்வாறு முதுபொழில் முற்றுகை நடந்து முடிந்தது.
அரசியல் பிழையா தறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின் வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றம் குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் |
195 |
தேய்வன கெடுகநின் தெவ்வர் ஆக்கம் |
வழிவழி சிறக்க வாழ்க. அரசியல் பிழையாது ஆட்சி புரிக. அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்து காட்டிய பெரியோரின் அடியொற்றிப் பிழை நேராமல் ஆட்சி புரிக. மேற்கில் தோன்றும் பிறைநிலா வளர்வது போல் உனது வெற்றிமுகம் வளரட்டும். கிழக்கில் தோன்றும் முழுநிலா தேய்வது போல உன் பகைவரும் அவர்களின் செல்வமும் தேயட்டும்.
செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல்
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே முழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் |
200 |
பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழுக என்னாய் விழுநிதி ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே |
205 |
வானுலகத்தை அமிழ்தத்தோடு சேர்த்துக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான். பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன் முழங்கும் கடல் ஏணிக்கு மேல் உலகம் மலர்ந்து பூத்திருக்கிறது.உயர்ந்த மேல் உலகத்தின் வானோர் மண்ணுலகத்தையே படையாகத் திரட்டிக்கொண்டு எதிர்த்து வந்தாலும் செழியன் பணியமாட்டான். பழிக்கு அஞ்சுபவன் - பாண்டிய நாட்டின் தென்பகுதியில் வாணன் என்பவன் விழுமிய நிதிக்குவியலை மூங்கில் குழாய்களில் சேமித்து வைத்திருந்தான். அதனை முழுமையாகப் பெறுவதாயினும் ‘ஏற்றல்’ பழி வரும் என்று எண்ணி வாங்கமாட்டான். புகழ்வேள்வி செய்பவன் - தன்னிடம் உள்ள விழுமிய செல்வத்தை யெல்லாம் ‘ஈய வேண்டும்’ என்னும் எண்ணத்தோடு வாரி வழங்கும் இசை வேள்வியைச் செய்வான்.
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுகநின் அவலம் கெடாது நிலைஇயர்நின் சேண்விளங்கு நல்லிசை |
செழியனை ‘அன்னாய்’ என விளித்துப் புலவர் சொல்லத் தொடங்குகிறார். எங்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவனே! உன் முன்னே நின்றுகொண்டு உன் பெருமைகளைப் பேசுவதால் என்ன பயன். சும்மா! ஒரு நினைப்பு. சொல்கிறேன் கேள். போரில் அப்பாவி மக்களை அழித்துவிட்டோமே என்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாய். இந்தத் துன்பக் கவலையை விட்டு விடுக. தொலைவிடங்களும் போற்றும் நின் புகழ் குன்றாமல் நிலைத்திருக்கட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, இலக்கியங்கள், போல், மதுரைக்காஞ்சி, கடல், பத்துப்பாட்டு, உலகம், செழியனை, தோன்றும், ஆட்சி, புரிக, உயர்ந்த, மேல், விழுமிய, விழுநிதி, வாணன், கெடுகநின், பெறினும், நடந்து, தெவ்வர், செழியன், டழியக், சென்று, சங்க, தாக்கினான், பாய்ந்தன, பிழையாது, அரசியல், அழிந்து, ஊதினர், தோன்றிய