மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
மன்னனது பெருங் கொடை
வரையா வாயிற் செறாஅ திருந்து பாணர் வருக பாட்டியர் வருக யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென |
750 |
இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக் |
நெடுஞ்செழியன் அரண்மனையானது உள்ளே நுழையத் தடை செய்யப்படாத வாயிலைக் கொண்டது. எத்தனைப் பேர் வந்தாலும் யார் வந்தாலும் சினம் என்பதே இல்லாமல் இருந்துகொண்டு செழியன் கொடை வழங்கினான். பண்ணிசைத்துப் பாடும் பாணர் வருக பண்ணிசைத்துப் பாடும் பாட்டியர் வருக புதுப்புது பாடல் பாடும் புலவர் வருக ஊது கருவியால் இசை பாடும் வயிரியர் வருக எனக் கூவி அழைத்து வழங்கினான். அவர்தம் சுற்றத்தாரையெல்லாம் பேணும் அளவுக்கு வழங்கினான். வழங்கிய பொருள்களைக் கொண்டுசெல்லத் தேரும் யானையும் வழங்கினான். வழங்கும் பொருள்களின் மதிப்பை எண்ணிப் பார்க்காமல் வீசுவதுபோல் வாங்குவோரை மதித்து வழங்கினான்.
மன்னனை வாழ்த்துதல்
களந் தோறும் கள் ளரிப்ப மரந் தோறு மை வீழ்ப்ப நிண வூன்சுட் டுருக் கமைய |
755 |
நெய் கனிந்து வறை யார்ப்பக் குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற் பரந்து தோன்றா விய னகராற் |
பாராட்டு, விருது, பரிசு – இவையெல்லாம் அரண்மனையில் வழங்கப்பட்டன. பரிசு பசியாற்றுமா? இதோ! மதுரை நகரத்துக்குள் ஆங்காங்கே உணவு விருந்து. களம் கண்ட இடங்களிலெல்லாம் கள் விருந்து. மரம் கண்ட இடங்களிலெல்லாம் மை என்னும் வெள்ளாட்டுக் கடாக்கறி சமைத்த விருந்து. பாறை கண்ட இடங்களிலெல்லாம் நெய் வழிய வழியச் சுட்டுத் தரும் நிணவூன் விருந்து. கட்டிய வீடு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை மேகம் போலப் புகை எழும்பச் சமைத்துத் தரும் உணவு விருந்து. இப்படித்தான் மதுரை நகரம் விளங்கியது.
பல் சாலை முது குடுமியின் நல் வேள்வித் துறை போகிய |
760 |
தொல் லாணை நல் லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவி னெடியோன் போல வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி |
765 |
இவர்களை ஒன்றுதிரட்டித் தமிழாய்ந்து, தமிழ் வளர நல்வேள்வி செய்தவன் நிலந்தரு திருவின் நெடியோன். தமிழ் வளர்க்கும் நல்வேள்விக்கு இவன் நிலக்கொடை வழங்கினான். இந்த நிலக்கொடையால் இவன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். இந்தத் தமிழ்க்கொடை வியக்கத் தக்க பெருமை கொண்டது. சான்றாண்மை மிக்கது. செம்மையானது. பலர் வாயாலும் புகழப்படுவது. புகர் என்னும் குற்றம் கரும்புள்ளிக் குற்றம் இல்லாத்து. நிலந்தரு திருவின் நெடியோன் போல நீ (நெடுஞ்செழியன்) நல்வேள்வி செய்து சிறப்புடன் திகழ வேண்டும் இது மாங்குடி மருதனாரின் வாழ்த்து
அரிய தந்து குடி யகற்றிப் பெரிய கற் றிசை விளக்கி முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் |
770 |
இதுவும் மாங்குடி மருதனாரின் வாழ்த்து தருபவை அரிய பொருள்களாக இருக்க வேண்டும் குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவதாக இருக்க வேண்டும் அரிய பெரிய செய்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் புகழ் ஒளி உன்மீது வீச வேண்டும் கடலில் தோன்றும் ஞாயிறு போல் இளவெயில் வீசவேண்டும் பல மீன்களிடையே விளங்கும் திங்கள் போல் தண்ணொளி தரவேண்டும் நீ திங்கள் போலவும் உன் சுற்றம் விண்மீன்கள் போலவும் திகழ வேண்டும்.
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவ னாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப் |
நெடுஞ்செழியனின் படைத்தலைவன் மாறன். இவனை மாங்குடி மருதனார் ‘பெரும்பெயர்’ பெற்றவன் என்று குறிப்பிடுகிறார். பொதுவாக மார்பில் மாலையுடன் தோற்றமளிக்கும் இவன் நெடுஞ்செழியனுக்கு, முன்பே இருந்த புகழை நிலைநாட்டியவன். இந்த மாறன் நெடுஞ்செழியனின் படைத்தலைவன். இவன் தலைமையில் கோசர் படை ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட கோசர் நெடுஞ்செழியன் சொன்னபடியெல்லாம் நடந்துகொண்டனர். ‘இளம்பல் கோசர்’ என்று பெயர் பெற்றிருந்த இவர்கள் நெடுஞ்செழியனின் வாய்மொழிக்கிணங்க நடந்துகொண்டதால் ‘வாய்மொழிக் கோசர்’ என்றும் சிறப்பிக்கப்படலாயினர்.
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த | 775 |
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன ரவரும் பிறகும் துவன்றிப் பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த |
ஐவரும், குறுநில மன்னரும் கூடியிருந்து பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து வாழ்த்தினர். பொலம்பூண் ஐவர் – விளக்கம் செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின் தாரோன், வழுதி, குமரிச் சேர்ப்பன், வைகையந் துறைவன், மாறன், பொதிய வெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கௌரியன் – என்பன பாண்டியனைக் குறிக்கும் என்று சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. இவற்றில் பஞ்சவன் என்பது நெடுஞ்செழியனைப் புகழ்ந்த பொலம்பூண் ஐவரோடு தொடர்புடையது. ஐவர் என்னும் சொல் சங்கப் பாடல்களில் பஞ்ச பாண்டவரைக் குறிப்பதாகவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் பஞ்சவரைத் துன்புறுத்திய கௌரியர் பெயரும் பாண்டியனைக் குறிப்பதாகவே அமைந்திருப்பதுதான். பாண்டியனோடும், முருகனோடும், திருமாலோடும் தொடர்பு படுத்திக் காட்டப்பட்டுள்ள ‘ஐவர்’ என்னும் சொல் பஞ்ச பாண்டவரைக் குறிக்கவில்லை. ‘பொலம்பூண் ஐவர்’ என்று மதுரைக்காஞ்சியில் வரும் தொடரிலுள்ள ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியைத் தொகுத்துப் பார்க்கும்போது தெரியவரும் செய்திகளையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. எழினி, சென்னி, திரையன், நன்னன், எவ்வி, வளவன், முருகன், திருமால் – ஆகியோர் ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியுடன் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பொலம்பூண் மன்னர் பலர் என்று குறிப்பிடும் பாடலும் உள்ளது. இவற்றில் கடவுளர் பெயரையும், சோழரைக் குறிக்கும் இரண்டு பெயர்களில் ஒன்றையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், 1. தகடூர் அதியமான் மகன் எழினி, 2. பாழி அரசன் நன்னன், 3. காஞ்சி அரசன் திரையன், 4, நாகை அரசன் எவ்வி, 5, சோழர்களில் ஒருவன் –ஆகியோர் பாண்டியனைப் புகழ்ந்த ஐவர் என்று தெரியவரும்.
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் |
780 |
மகிழ்ந்தினி துறைமதி பெரும் வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே. |
மகளிர் பொற்கிண்ணத்தில் தரும் தேறலை உண்டுகொண்டு நீ உன் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழவேண்டும் மணமகளிருடன் வாழ்க வென்ற புகழையும் வழங்கிய புகழையும் சொல்லிச் சொல்லி வாழ்த்திய புலவர் இங்கு மனைவி மக்களுடன் மகிழ்ந்து வாழ்க என்று வாழ்த்துகிறார். தேறல் என்பது தெம்பு தரும் கள். மயக்கம் தரும் கள் வேறு. மகளிர் தேறல் ஊட்ட மகிழ்ந்து இனிது அருந்துக. மணம் கமழ் தேறல் அருந்துக. பொன் கிண்ணத்தில் ஊட்ட அருந்துக. அணி விளங்கும் அழகியர் ஊட்ட அருந்துக. உன் வாழ்நாள் வரையறுக்கப்பட்டது. அந்த வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு இனிது வாழ்க.
தனிப் பாடல்கள்
பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல் திங்கள் நெடுங் குடையின் கீழானை, - அங்கு இரந்து நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர் தாம் வேண்டும் கூடல் தமிழ். |
1 |
உலகம் கூடல் நகரில் வளரும் தமிழை வேண்டும் வேண்டும் என்று விரும்புகிறது. நெஞ்சே! அங்கே போய் அங்கிருக்கும் பாண்டியனை இரந்து உனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள நீ விரும்பு. பசுமை தவழும் கண்ணினை உடைய இளம் பகட்டின் மேல் இருப்பவன் மதுரையிலுள்ள சொக்கன். நெடுஞ்செழியன் பகட்டின் மேலான். சொக்கன் தலையில் திங்கள். பாண்டியன் திங்கள் குலம். அவன் குடை திங்கள் போல் குளுமை தருவது. நெஞ்சே! அங்கிருந்து அவனை வேண்டலாம் செல்க.
சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும் நல் இருந் தீம் தாது நாறுதலால், - மல்லிகையின் வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத தண் தாரான் கூடல் தமிழ்? |
2 |
மல்லிகையில் பூம்போது தோன்றும். தாதும் தேனும் மணக்கும். பாண்டியன் நெடுஞ்செழியன் மார்பில் மாலையாகும். கூடல் நகரில் தமிழ்ச்சொல் பாவாகப் பூக்கும். அந்தப் பாப்பூவில் கருத்துப்பொருள் என்னும் தாதுத்தேன் மணக்கும். அப் பூமாலையாகிய சங்கப் பாடல்களின் தமிழ் பாண்டி நாட்டுக்கும் உலகுக்கும் மாலைபோல் அமையும்.
மதுரைக்காஞ்சி முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, வேண்டும், என்னும், திங்கள், வழங்கினான், வருக, தமிழ், நெடுஞ்செழியன், விருந்து, தரும், போல், இவன், அருந்துக, தேறல், இடங்களிலெல்லாம், பாடும், மதுரைக்காஞ்சி, இலக்கியங்கள், ஐவர், கூடல், மாறன், புகழ்ந்த, மகளிர், பாண்டியன், பொலம்பூண், நெடுஞ்செழியனின், அரசன், அரிய, மாங்குடி, சொல், வாழ்நாள், சங்கப், திருவின், ஊட்ட, நெஞ்சே, கண்ட, பத்துப்பாட்டு, நிலந்தரு, வாழ்க, பகட்டின், பாடல்களில், பஞ்ச, போய், இரந்து, என்பது, இவற்றில், குறிக்கும், மணக்கும், இளம், சொக்கன், நகரில், குறிப்பதாகவே, எவ்வி, நன்னன், மகிழ்ந்து, புகழையும், முழுவதும், திரையன், எழினி, பாண்டியனைக், கமழ், ‘பொலம்பூண்’, இனிது, தெரியவரும், பாண்டவரைக், போலவும், நெய், வழங்கிய, புலவர், பரிசு, மதுரை, நல்வேள்வி, சிறப்பிற், உணவு, பண்ணிசைத்துப், செழியன், பாணர், கொடை, சங்க, பாட்டியர், வயிரியர், வந்தாலும், கொண்டது, நெடியோன், பலர், மார்பில், படைத்தலைவன், விளங்கும், கோசர், கோசர்’, நெடுஞ்செழியனைப், குறுநில, தோன்றும், இருக்க, மருதனாரின், திகழ, குற்றம், வாழ்த்து, பெரிய, போலவும், ஞாயிறு, பஞ்சவன்