குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல்
லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிச | 170 |
யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே |
நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை
ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் | 175 |
அவன் யானை முகத்தில் அம்பு எய்தான் - நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான். களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது. அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது. அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும், வரிக்கோடுகளும் சிதைந்தன. அயர்ந்து போன அந்த ஆண்யானை அங்கே நிற்காமல் திரும்பி ஓடிவிட்டது. உடனே நாங்கள் முருகனுக்கு வெறியாடும் களத்தில் மகளிர் கைகோத்துக் கொண்டு ஆடுவதுபோல் கைகோத்துக் கொண்டோம்.
திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடேஎ நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை |
கை கோத்துக்கொண்டிருந்த நாங்கள் நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம் - முருகனுக்கு வெறியாடுவோர் கடப்பம்பூ மாலையை அணிந்திருப்பர். அந்த மாலை நெருக்கமாகப் பிணிக்கப் பட்டிருப்பது போல் நாங்கள் எங்களுடைய கைகளை ஒருவருக்கொருவர் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம். வெள்ளம் அரிக்கும்போது கரையோர வாழைமரம் ஆடுவது போல அப்போது தலைவி நடுங்கினாள்.
யஞ்சி லோதி யசையல் யாவது | 180 |
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந் தென்முக நோக்கி நக்கன னந்நிலை |
அவன் அவளை வெள்ளத்திலிருந்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தான். அவன் பெருந்தகையாளன். அழகே! அசையாதே. எதற்கும் அஞ்சாதே. உன் அழகை நான் சுவைக்க வேண்டும் – என்றான். வந்தான். அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். ஏதோ நெடுநேரம் எண்ணிப்பார்த்தான். என்னைப் பார்த்தான். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டன். அவளை அவன் நுகர நான் விலகிக்கொள்ளவேண்டும் என்பது அந்தச் சிரிப்பின் பொருள்.
தலைவி தலைவனுடன் கூடிய நிலை
நாணு முட்கு நண்ணுவழி யடைதர வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ |
185 |
யாக மடைய முயங்கலி னவ்வழிப் பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற. |
190 |
னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச் சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள் கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல் வரையர மகளிரிற் சாஅய் விழைதக |
195 |
நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். அது மயிலாடும் பாறை. சுனையில் பலாப்பழத் தேன் ஒழுகியது. அச்சமும் நாணமும் ஓடிப்போக வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விட்டன. ‘ஒய்’ என்று அவள் நெஞ்சை அவன் தன் நெஞ்சில் அணைத்துத் தழுவிக்கொண்டான். அவள் பிரிய முயன்றாள். அவன் விடவில்லை. பழுத்த மிளகு உதிர்ந்து கிடந்த பாறை. பக்கத்தில் நீண்ட சுனை. அதில் முழு மாம்பழம் ஒன்று விழுந்தது. உள்ளுறை - சுனை – பெண்ணுறுப்பு, மிளகு – பெண்ணுறுப்பில் உள்ள பருப்பு, மாம்பழம் – ஆண் விந்து. பக்கத்து மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அதிலிருந்து பலாத்தேன் சுனையில் ஒழுகியது. அதைத் தண்ணீர் என்று கருதி மயில் பருகியது. மயங்கி ஆடியது. உள்ளுறை - பலாத்தேன் – அவள் உறுப்பின் ஊறல், மயில் – தலைவி, மயக்கம் – கலவி மயக்கம். ஊரிலே திருவிழா. கயிற்றில் ஏறிப் பெண் ஆடினாள். உறுமுதலும் தட்டலும் கேட்கும் மேளத்தின் பாணிக்கேற்ப ஆடினாள். இந்த ஆடுமகள் கயிற்றின்மேல் ஏறி ஆடுவதுபோல் மயில் மரக்கிளையில் ஏறி ஆடியது. மலையில் வாழும் அரம்பையர் போல் சாயல் கொண்டவை அந்த மயில்கள். உள்ளுறை - கயிறூர் பாணி – அவர்கள் மோதி விளையாடியது.
விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட் டண்கம ழலரி தாஅய் நன்பல வம்புவிரி களித்திற் கவின்பெறப் பொலிந்த குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற |
தலைவியைத் தழுவிய தலைவன் யார்? குன்றுகள் நிறைந்த நாட்டுக்குத் தலைவன். எல்லாரும் விரும்பும் பெருமையும் பீடும் உடையவன். அவன் மலையுச்சியில் காந்தள் மலர்ந்திருக்கும். அவை உதிர்ந்து கிடக்கும் பரப்பில் புதியதோர் மணம் கமழும். இப்படிப்பட்ட நிலப்பரப்புகள் கொண்ட நாட்டுக்குத் தலைவன்.
இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை
லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு | 200 |
சாறயர்த் தன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலருணப் பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில் வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு |
205 |
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங் கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை |
ஊரறியத் திருமணம் செய்துகொள்வேன், இல்லறத்தில் விருந்தோம்பல் என்னும் தெப்பத்தில் ஏறி இன்பமாகச் செல்லலாம் - என்றான். எங்களுடைய உள்ளக் கிடக்கையை அவன் படித்தான். எங்களைத் தேற்றினான். என்ன சொல்லித் தேற்றினான்? திருமண விழாவை ஊர்த்திருவிழாவாக நடத்துவேன். மிடாமிடாவாய்ச் சமைத்த சோற்றை வந்தவர்க்கெல்லாம் வழங்குவேன். திருமண வளநகர் (வளமனை) ஊரார் எல்லாருக்கும் திறந்திருக்கும். அதற்குள் எல்லாரும் தடையின்றி நுழையலாம். வந்தவர்களுக்கெல்லாம் புலவுச்சோறு. (பிரியா1ணி) அதில் நெய்யும் ஒழுகும். குடும்பத்தைச் சேர்ந்த உற்றார் உறவினர்களும் விருந்தினரோடு விருந்து உண்பர். அவர்கள் உண்டபின் மீதம் இருப்பதைப் பிணைந்து கவளமாக உன்னோடு சேர்ந்து நான் உண்பது எனக்குப் பெருமை தரும் செயல். இல்வாழ்க்கை நீரோட்டத்தில் விருந்தோம்பல் என்னும் அறநெறிப் புணையில் ஏறிக்கொண்டு நாம் இன்பமாகச் செல்வோம் – என்று தேற்றினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, அவன், தலைவன், நான், இலக்கியங்கள், உள்ளுறை, குறிஞ்சிப்பாட்டு, அந்த, நாங்கள், ஒழுகியது, அவள், மயில், தேற்றினான், பாறை, தலைவி, பத்துப்பாட்டு, அதில், மாம்பழம், மிளகு, சுனையில், உதிர்ந்து, சுனை, ஆடினாள், விருந்தோம்பல், என்னும், இன்பமாகச், திருமண, வளநகர், எல்லாரும், ஆடியது, மயக்கம், அச்சமும், நாட்டுக்குத், பலாத்தேன், அவளை, நீண்ட, முருகனுக்கு, கைகோத்துக், கொண்டு, எய்தான், முகத்தில், சங்க, அம்பு, யானை, குருதி, ஆடுவதுபோல், பெருந்தகை, எங்களுடைய, வந்தான், என்றான், கயிறூர், போல், பாய்ந்தோம், நுரைத்துக்கொண்டு, வரும், வெள்ளத்தில், நாணமும்