குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு
நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர |
தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல
மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் | 135 |
தாகாண் விடையி னணிபெற வந்தெ மலமர லாயிடை வெரூஉத லஞ்சி |
அவன் பசுவைப் பார்த்த காளை ஆனான். அவனைப் பார்த்ததும் நாங்கள் நடுங்கினோம். எழுந்து நடக்க முடியாமல் தள்ளாடினோம். நெஞ்சு படபடத்தது. மிரண்டு பார்த்துக்கொண்டே வேறிடம் நோக்கி நகர்ந்தோம். அவன் நிலையோ மாறுபட்டிருந்தது. விரும்பத்தக்க இனிய நிலத்தில் பசுவைக்கண்ட காளைபோல அவன் நெருங்கி வந்தான். நாங்கள் திண்டாடி மருள்வதைப் பார்த்து அவன் அஞ்சினான்.
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி யசைமென் சாய லவ்வாங் குந்த |
140 |
மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த கெடுதியு முடையே னென்றென னதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக் |
கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான் மென்மை, இனிமை, விருப்பம் மூன்றும் கலந்து அவன் பேசினான். தலைவி கூந்தலின் ஒப்பனையழகைப் பாராட்டினான். ஒளிரும் வளையலும், ஒய்யாரமாக அசையும் மேனியழகும், அழகால் வளைந்து குழிந்த உந்தியும், மடமைத் திமிரி மழைபோல் ஈரப்பார்வை தரும் கண்களும் கொண்ட இளமான்களே! – என்று அழைத்தான். வரம்பு கடந்த கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான். அவன் சொல்லுக்கு நாங்கள் மறுமொழி கூறவில்லை. எனவே அவன் அல்லாந்தான், துன்புற்றான், கலங்கினான்.
தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு சொல்லலும் பழியோ மெல்லிய வீரென |
145 |
பேசக்கூடாதா?. மென்மைத்தன்மை உள்ளவர்களே! கெடுதியை விடுவித்துச் சொல்லாவிட்டாலும் வாய்ச்சொல் தரலாமே. பேசினால் உங்களுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமோ? - என்றான்
நைவளம் பழுநிய பாலை வல்லோன் கைகவர் நரம்பி னிம்மென விமிரு மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த தாதவி ழலரித் தாசினை பிளந்து தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக் |
150 |
கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ் சொல்லற் பாணி நின்றன னாக |
அவன் என் சொல்லுக்காக காத்துக்கொண்டு நின்றான். பாலையாழில் நைவளப்பண்ணை மீட்டவல்லவன் அவன். காதல் கொண்ட வண்டினமும், சுரும்பினமும் விரும்பி அமர்ந்திருக்கும் பூங்கொத்துள்ள சிறுகிளை ஒன்றை ஒடித்துத் தன்னைச் சூழ்ந்து வரும் நாய்களை ஓட்டினான். களிறு மரக்கொம்புகளை ஒடித்து மதம் ஒழுகும் தன் காதோரத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டுவது போல ஓட்டினான். தலைவியின் சொல்லுக்காகக் காத்துக்கொண்டு நின்றான். காதலில் மயங்கி வரும் யானைபோல் தலைவியின் முன் வந்தான்.
யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை
விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத் தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து |
155 |
சேம மடிந்த பொழுதின் வாய்மடுத் திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக் குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக் கணைவிடு புடையூக் கானங் கல்லென |
160 |
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக விரும்பிணர்த் தடக்கை யுருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு மையல் வேழ மடங்கலி னெதிர்தர |
165 |
அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது. கதிர் அறுத்தபின் உள்ள தினைத்தட்டைப் புல்லை அறுத்து வேயப்பட்ட குடிசை. அதன் தலைவி மனையோள். மானைப்போல் மருண்டு பார்த்துக் கொண்டே தன் கணவனுக்குத் தேனில் பிழிந்தெடுத்த தேறல் கள்ளை ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊட்டிவிட்டாள். உண்ட அவன் யானைக் காவலுக்குச் சென்றான். பாம்பு போல் வளைந்த வில்லுடன் சென்றான். யானை விளைச்சலைப் பாழாக்குவது அவன் நெஞ்சை நோகச் செய்தது. அதனால் உரத்திலும், உடலிலும் தோன்றிய சினச் செருக்குடன் அம்பெய்யப் புடைத்துக் கொண்டும், வீளையொலி எழுப்பிக் கொண்டும், வெடி போட்டு முழக்கம் செய்து கொண்டும் காடெல்லாம் கலங்கும்படி சென்றான். மழை பெய்ய உருமும் இடிபோல் வெடி முழக்கம் கேட்ட யானை பிளிறிற்று. மதம் பிடித்தது போல் தன் கையை நிலத்தில் போட்டு மரங்களை அடியோடு சாய்த்தது. இரவு வேளையில் வெடி சத்தம் கேட்டு மருண்டு போயிருந்த யானை அப்போது பகல் வேளையில் மடங்கல் சிங்கத்தைக் கண்டு மேலும் மருண்டுபோய் அதனை எதிர்த்துத் தாக்கும் நிலையினதாய் அவளும் அவனும் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தது. தினைப்புனம் காக்கும் பணியில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவது வழக்கம். மகளிர் தினைக்கதிர்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுவர். காளையர் அதனைக் கவரவரும் விலங்குகளை ஓட்டுவர். இப்பகுதியில் விலங்குகளை ஓட்ட வேட்டையாடிக்கொண்டு வரும் காளையர் பேசப்படுகின்றனர்.
வுய்விட மறியே மாகி யொய்யெனத் திருத்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்திச் சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ |
முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு. யானையைக் கண்டதும் பயந்து ஓடினோம். தப்பிக்கும் இடம் தெரியவில்லை. வளையல் குலுங்கி ஒலிக்கும்படி ‘ஒய்’ என்று கூவிக்கொண்டு ஓடினோம். நாணம் மறந்துபோய் விட்டது. நெஞ்சம் படபடத்தது. அவனை அணைத்துக்கொண்டு தலைவி நடுங்கினாள். மழைமேகத்தைக் கண்டால் மயில் ஆடுமல்லவா. அப்படி மழைமேகப்பேய் பிடித்த மயில்போல் நடுங்கினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு, அவன், இலக்கியங்கள், யானை, குறிஞ்சிப்பாட்டு, வரும், வெடி, தலைவியின், தலைவி, என்றான், கொண்டும், மதம், கெடுதி, பத்துப்பாட்டு, நாங்கள், சென்றான், கொண்ட, போல், முழக்கம், விலங்குகளை, ஓடினோம், நடுங்கினாள், காளையர், ஓட்டுவர், மருண்டு, வேளையில், கவரவரும், போட்டு, நின்றான், வந்தான், பார்த்து, நிலத்தில், படபடத்தது, சங்க, தலைவன், மெல்லிய, செய்துவிட்டேன், மகளிர், அப்போது, ஓட்டினான், காத்துக்கொண்டு, போலும், வந்தது