திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு
ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக் கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின் சீலம் இனிது உடைய ஆசானும், - இம் மூவர் ஞாலம் எனப் படுவார். |
26 |
நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார்.
உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும் தூஉயம் என்பார் தொழில். |
27 |
குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.
வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும், இல்லது காமுற்று இருப்பானும், கல்விச் செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர் உமிக் குற்றுக் கை வருத்துவார். |
28 |
வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும், கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும், பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.
பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குண்றாமை; கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை; மண் விழைந்து வாழ் நாள் மதியாமை; - இம் மூன்றும் நுண் விழைந்த நூலவர் நோக்கு. |
29 |
தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருத்தலும், வாழ்கின்ற காலத்தை மதிக்காமல் இருத்தலும் கற்றவர்களின் கருத்தாகும்.
தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும், மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும், என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர் நின்ற புகழ் உடையார். |
30 |
தன்னை மதித்தவரை இகழாது இருத்தலும், செல்வம் வந்த போது நண்பர்களை மறவாமல் இருத்தலும், பகைவரின் செல்வம் கண்டு மகிழ்வதும் செய்தவர் அழியாப் புகழ் உடையார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இருத்தலும், இலக்கியங்கள், விழைந்து, மூவர், கீழ்க்கணக்கு, பதினெண், திரிகடுகம், ஆகிய, வேண்டி, உடையார், செல்வம், புகழ், தோல், விருந்தினனும், சங்க, உயிரைக், உடைய, வற்றிச், மூன்றும்