திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில் மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல் கடலன்றிக் காரூர் கறுத்து. |
121 |
யானொருத்தி; எனக்கு ஒன்றல்ல பல பகைகள் என்னை மலைத்தலே தமக்கு ஒழுக்கமாகக் கொண்டன: வேறாகத் துணையைப் பிரிந்து பொருந்தில் மடற்பனை மேலிருந்த அன்றில், மாலைப்பொழுது, மழை பெயல், ஆம்பற்குழல்.கடல் அன்றியே முகில்கள் என்று சொல்லப்பட்டஇவையெல்லாம் மேல் வெகுண்டு.
கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற, ஏனம் இடந்த மணிஎதிரே - வானம் நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி புகுவது போலும் உடைந்து. |
122 |
காடுகள் தழைத்துத் தலையெடுக்க, ஆயர் ஊதுங் குழலோசை தோன்ற, ஏனங்கள் இடந்த மணிகளினெதிரே முகில்கள் சிரிப்பதுபோல மின்கள் ஒளிவிட இக்காலத்தும் இறந்து படாமையான் நாணில்லாத என்னுயிர் ஒழுகுவது போலவுளது.
இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும் உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி தெளியச் சுடப்பட்ட வாறு. |
123 |
இப்பிறப்பின்கட் செய்த தீவினை இப்பிறப்பின்கண்ணே விளையும் போலும்! மறுபிறப்பின்கண் ஆம் என்பார் அறியாதார் காண்; முன்பு நம்மை எளியரெனக் கொண்டு துயர்செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சுடப்பட்டவாற்றைப் பாராய்.குழல் நலிவது நெருப்பாற் சுடப்பட்டுத் துளை பட்ட பின்:சூடுண்டது பிறரை நலிந்ததாற் பயனென்று குழலைச் சொல்லுமாறென்னையெனிற் பிறரை நலியுந் தன்மை முன்பே அதற்குளதாதலாற்பட்ட தெனக் கொள்க.
5. மருதம்
நிலம் : வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.
செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால் இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே ஆடினான் ஆய்வய லூரன்மற்று எங்கையர்தோள் கூடினான் பின் பெரிது கூர்ந்து. |
124 |
செவ்வழி யாழையுடைய பாண்மகனே! சீரார்ந்த விளையாட்டுத் தேரினைத் தன்கையால் இம்மனையின்கண் ஈர்த்து நடத்துகின்ற என்மகன் பிறப்பதற்கு முன் இம்மனையின்கட் பிரியாது ஆய்வயலூரன் ஒழுகினான்; பின்னை யெல்லாம் எங்கையர் தோளே மிக விரும்பி முயங்கினான்; ஆதலான் இப்பருவம் யாம்அவர்க்குத் தக்கேம் அல்லேம்.
மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார் தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல் தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய் கடியுடையேன் வாயில் கடந்து. |
125 |
அழகிய காம்பையுடைய யாழ்ப்பாணனே! மண்ணாற் செய்யப்பட்ட யானைப்பாகராகிய என்மகனார் தாங் கொட்டுகின்ற தூக்கோற் றுடியோடு இங்குத் தோன்றி யொழுகுவதற்கு முன்பு தூய புரிப்புச் செயல் களையுடைய தொடியுடையார் மனையின்கட் சென்று தோன்றி யொழுகுமோ சொல்லாய் இப்பொழுது; அவனால் வரையப்பட்ட வாழ்வினையுடையேன் வாயில்கடந்து.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், பாண்மகனே, திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், தோன்றாமுன், பிறரை, சொல்லாய், தோன்றி, பின், தொடியுடையார், தூக்கோல், போலும், கொண்டன, என்னை, சங்க, முகில்கள், இடந்த, ஈர்ங்குழலார், நம்மை, முன்பு