இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
உண்மைமால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம் புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுணர்வான் அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை எண்பொருட்கு ஊர்இயலைச் சார்ந்து. |
41 |
மாசகல வீறும் ஒளியன்ன நோன்புடையோர் மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆசகற்றி இன்னல் இனிவாயாக் கொள்வார் பிறப்பிறப்பில் துன்னார் அடையும் நிலன். |
42 |
பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா பேரா ஒருநிலனாம் நீங்காப் பெரும்பொருளை ஏரா அறிந்துய்யும் போழ்து. |
43 |
மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம் பொய்யுணர்வாம் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும் ஐயுணர்வான் உய்ந்துஅறம் சார்பாச் சார்பொறுக்க நையா நிலைவேண்டு வார். |
44 |
ஒன்றுண்டே மற்றுடலில் பற்றி வினையிறுக்கும் பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத் தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர் நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உய்ந்தார் புன்பாலால் சுற்றப் படார். |
45 |
இன்னிலை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், சங்க