பதிற்றுப்பத்து - பதிகம்
பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன், கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை, பல் வேல் தானை அதிகமானோடு இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, |
5 |
முரசும் குடையும் கலனும் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு, துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து, தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை |
10 |
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: குறுந் தாள் ஞாயில்,
உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம்
சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு
இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - பதிகம், பதிகம், இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, நிறம், வென்று, சங்க, எட்டுத்தொகை