பதிற்றுப்பத்து - பதிகம்
வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக் குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி, கான் நவில் கானம் கணையின் போகி, |
5 |
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை இன் பல் அருவிக் கங்கை மண்ணி; இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு; மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து; உறு புலி அன்ன வயவர் வீழ, |
10 |
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி; அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து; பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின் முழாரை முழு முதல் துமியப் பண்ணி, வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் |
15 |
பல் இருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல் ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர் ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, |
20 |
கெடல் அருந் தானையொடு கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை, கரணம் அமைந்த காசு அறு செய்யுட் பரணம் பாடினார் பத்துப் பாட்டு. |
அவைதாம்: சுடர் வீ வேங்கை,
தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை
அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை,
செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - பதிகம், பதிகம், இலக்கியங்கள், பதிற்றுப்பத்து, இறுத்து, செருவின், புறத்து, பேர், சங்க, எட்டுத்தொகை