பதிற்றுப்பத்து - 49. மன்னவனது வரையா ஈகை
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : செங் கை மறவர்
யாமும் சேறுகம்; நீயிரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கு இயல் விறலியர்! கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர்!- களிறு பரந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப; |
5 |
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந் தார், வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து, மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி, நெய்த்தோர் தொட்ட செங் கை மறவர் |
10 |
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி, மழை நாட் புனலின் அவல் பரந்து ஒழுக, படு பிணம் பிறங்க, பாழ் பல செய்து, படு கண் முரசம் நடுவண் சிலைப்ப, வளன் அற, நிகழ்ந்து வாழுநர் பலர் பட, |
15 |
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த பெருஞ் சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 49. மன்னவனது வரையா ஈகை , இலக்கியங்கள், மன்னவனது, பதிற்றுப்பத்து, வரையா, மறவர், பரந்து, செங், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்