பதிற்றுப்பத்து - 29. வென்றிச் சிறப்பு
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் கை மகளிர்
அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி, வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும், முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த தடந் தாள் நாரை இரிய; அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், |
5 |
வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும், அழியா விழவின், இழியாத் திவவின், வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ, மன்றம் நண்ணி, மறுகு சிறை பாடும் அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய!- |
10 |
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மயிர் புதை மாக் கண் கடிய கழற, அமர் கோள் நேர் இகந்து, ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் வரம்பு இல் தானை பரவா ஆங்கே. |
15 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 29. வென்றிச் சிறப்பு , இலக்கியங்கள், வென்றிச், மகளிர், பதிற்றுப்பத்து, சிறப்பு, வெண், சங்க, எட்டுத்தொகை, வண்ணம்