நற்றிணை - 371. முல்லை
காயாங் குன்றத்துக் கொன்றை போல, மா மலை விடர் அகம் விளங்க மின்னி, மாயோள் இருந்த தேஎம் நோக்கி, வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
5 |
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், குழல் தொடங்கினரே கோவலர்- தழங்கு குரல் உருமின் கங்குலானே. |
பாகனே! இதுகாறும் மழைபெய்யாதிருந்த மேகங்கள் நிறைய மலர்ந்திருக்கின்ற காயா மரங்களையுடைய மலையின்கண்ணே இடையே சரக்கொன்றை மலர்ந்தாற்போல; பெரிய மலைப் பிளப்பிடங்கள் எல்லாம் விளங்கும்படியாக மின்னி; என் காதலியாகிய மாமை நிறமுடையாள் இருந்த இடம் நோக்கிச் சென்று; அகன்ற கரிய ஆகாயத்தினிடம் எல்லாம் மறைபடும்படி பரந்து மழை பெய்யத் தொடங்கிவிட்டன; ஆதலால் ஆராய்ந்தணிந்த கலன்களையுடைய நங் காதலி நிழல் விளங்கிய ஒளியையுடைய கைவளைகள் கழன்றுவிழத் திண்ணமாக ஏக்கமுற்று அழத் தொடங்கினளேயாம்; அவள் அழுமிடத்துக்கு எதிரே இராப்பொழுதில் முழங்குகின்ற இடியோசை போலக் கோவலர் புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினவராவார்;
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது. - அவ்வையார் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 371. முல்லை, இலக்கியங்கள், முல்லை, நற்றிணை, நிழல், கோவலர், எல்லாம், இருந்த, அகம், எட்டுத்தொகை, சங்க, மின்னி