நற்றிணை - 183. நெய்தல்
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, உமணர் போகலும் இன்னாதாகும்- |
5 |
மடவை மன்ற- கொண்க!- வயின்தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த வறு நீர் நெய்தல் போல, |
10 |
வாழாள் ஆதல் சூழாதோயே. |
கொண்கனே ! மருத நிலத்தின்கணுள்ள உப்பு வாணிகர் தமது நாட்டில் விளைந்த வெளிய நெல்லைப் பண்டிகளிலேற்றிச் சென்று கொடுத்து அந்நெல் விலையாக அயனாடாகிய நெய்தனிலத்திலே விளைந்த உப்பைப் பெற்றுக்கொண்டுபோய் விலைகூறி; நீண்டநெறியிலே பண்டிகளுடனே நிலாப்போன்ற மணற்பரப்பைக் கடந்து பிரிந்து போதலாலே; தனியே அவ்விடத்திலிருப்பதை வெறுத்த சுற்றத்துடனே அங்குநின்றும் போந்து அவ்வுப்பு வாணிகர் செல்லுதலும்; அவர் தங் குழுவோடும் பண்டிகளோடும் சென்றொழிந்தமை அவ்வூர்க்கு இன்னாமையைத் தருவதொன்றாயிருக்குமன்றோ? அப்படியே நீயும் எம்மைக் கையிகந்து பெயர்வது எமக்கும் இன்னாமையைத் தருவதொன்றாகும்; அங்ஙனம் துன்பந்தருதற்கு இடங்கள்தோறும் துன்புறுத்தி வருகின்ற கூதிரின் ஊதைக்காற்றுடனே; நீ இல்லாது தமியேமாகிய காலத்துப் போதருகின்ற மாலைப்பொழுதும் ஏதுவாகவுடைத்தாயிராநின்றது; அதனை அறிந்து வைத்தும் நீ பிரியின் மீன் இனத்தை மிகத்தின்ற வெளிய நாரை மிதித்த நீர்வற்றிய குளத்து நெற்தன் மலர்போல; இவள் ஒருநொடிப் பொழுதும் உயிர் வைத்திருப்பவள் அல்லள், அங்ஙனம் இறந்துபடும் இவளது செயலை நினையாத நீ அம்மவோ ! திண்ணமாக அறியாமையுடையையாவாய்;
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 183. நெய்தல், நெய்தல், இலக்கியங்கள், விளைந்த, நற்றிணை, வெளிய, இன்னாமையைத், அங்ஙனம், வாணிகர், மீன், எட்டுத்தொகை, நாட்டு, சங்க, மிதித்த