நற்றிணை - 134. குறிஞ்சி
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது இதுகொல்?- வாழி, தோழி!- காதலர் வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
5 |
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, மெல்லிய இனிய கூறலின், யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவலே! |
10 |
தோழீ! வாழ்வாயாக!; நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; என்னை நோக்கிக் "கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக!" என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; அன்றியம் நுந்தை என்னைக் கூவி 'அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; 'நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்', என்று; மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம்¢ காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது;
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 134. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, இனிய, சென்று, நற்றிணை, முள், அஃது, புனத்தின்கண்ணே, நின், யான், குறி, சங்க, எட்டுத்தொகை, என்பது, தோழி, செய்த, காதலர், நுந்தை