நற்றிணை - 135. நெய்தல்
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை மா அரை புதைத்த மணல் மலி முன்றில், வரையாத் தாரம் வரு விருந்து அயரும் தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் இனிது மன்றம்ம தானே- பனி படு |
5 |
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், வால் உளைப் பொலிந்த, புரவித் தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. |
குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய நிலத்து வருந்தி வருதலாலுண்டாகிய குறைந்த செலவினையுடையவாய் ஒலிக்கின்ற அலைமோதிக் கொழிப்பக் கிடந்த புதிய மணலிலே தேருருள் அழுந்துதலானே செல்லமாட்டாது சுழலாநிற்கும்; வெளிய பிடரிமயிர் பொலிவு பெற்ற புரவிபூட்டிய தேரினையுடைய தலைவரொடு மகிழ்ந்து ஊடாடாத முன் உவ்விடத்தே; தொங்குகின்ற ஓலையையும் நீண்ட மடலையும் உடைய பனையினது கரிய அடி மரம் புதைபடுமாறு மூடப்பட்ட மணல் மிக்க முற்றத்தின்கணிருந்து; அளவுபடாத உணவுப் பொருளை வருகின்ற விருந்தினர்க்குப் பகுத்துக்கொடா நிற்கும்; மெல்லிய குடிவாழ்க்கை யுடையராயிராநின்ற அழகிய குடியிருப்பையுடைய சீறூர் மிக இனிமையாயிருந்தது; அவரொடு மகிழ்ந்து ஊடாடிய பின் அவர் நமது அருகிலின்மையாலே சீறூர் வருத்தமுடையதாய்த் தோன்றாநின்றது;
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது. - கதப்பிள்ளையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 135. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், சீறூர், நற்றிணை, மணல், மகிழ்ந்து, சங்க, எட்டுத்தொகை