குறுந்தொகை - 91. மருதம் - தலைவி கூற்று
(பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம் தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற் பலவா குகநின் நெஞ்சிற் படரே ஓவா தீயு மாரி வண்கைக் |
5 |
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி கொன்முனை இரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே. |
|
- அவ்வையார். |
நெஞ்சே! ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை ஆழமாகிய நீரையுடைய குளத்திலுள்ள கெண்டைமீன் கவ்வுதற் கிடமாகிய தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த் தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக! காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும் மேகம் போன்று கைம்மாறு கருதாத வண்மை யையுடைய கையினையும் விரைந்த செலவையுடைய ஆண் யானைகளையும் உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியென்னும் உபகாரியினது அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரிலுள்ளார் போல நீ துயிலும் நாட்கள் சிலவே ஆகுக!
முடிபு: நெஞ்சே, ஊரன் பெண்டினையாயின், நின் நெஞ்சிற்படர் பலவாகுக; நீ துஞ்சும் நாள் சில ஆகுக!
கருத்து: தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 91. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், மருதம், கூற்று, ஆகுக, குறுந்தொகை, நெஞ்சே, நின், ஊரன், அவன்பால், எட்டுத்தொகை, சங்க, இருப்பின்