குறுந்தொகை - 76. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி புலந்தது.)
காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச் செல்ப என்பவோ கல்வரை மார்பர் சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத் தண்வரல் வாடை தூக்கும் |
5 |
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே. | |
- கிள்ளி மங்கலங்கிழார். |
தோழி! மலைப் பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலையுடைய வளவிய இலையை பெரிய களிற்றினது செவியை ஒப்பத் தோன்றும்படி தடவி தண்ணிய வரவையுடைய வாடைக் காற்று அசைத்தற்குரிய மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில் நடுங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்.
முடிபு: அச்சிரக் காலத்தில் அஞருறக் கல்வரை மார்பர் செல்ப வென்ப.
கருத்து: தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 76. குறிஞ்சி - தலைவி கூற்று , தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், குறிஞ்சி, நான், குறுந்தொகை, செல்ப, மார்பர், கல்வரை, காலத்தில், எட்டுத்தொகை, அச்சிரக், சங்க