குறுந்தொகை - 68. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்றது.)
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின் ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும் அரும்பனி அற்சிரந் தீர்க்கும் மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே. |
|
- அள்ளூர் நன்முல்லையார். |
குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும்பொருட்டுக் கொள்ளும் பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனுக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் பரிகாரம் என்னை மணந்த அவருடைய மார்பேயாகும்; வேறு இல்லை.
முடிபு: அச்சிரந் தீர்க்கும் மருந்து அவர் மணந்த மார்பே; பிறிதில்லை.
கருத்து: அவர் உடன் இராமையால் இம் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 68. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, அவர், குறுந்தொகை, கூற்று, மணந்த, மார்பே, தீர்க்கும், சங்க, எட்டுத்தொகை, மார்பேயாகும்