குறுந்தொகை - 65. முல்லை - தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ வென்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன் இன்புறு துணையொடு மறுவந் துகளத் தான்வந் தன்றே தளிதரு தண்கார் வாரா துறையுநர் வரனசைஇ வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. |
5 |
- கோவூர்கிழார். |
தோழி! வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான் இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண்மானோடு களிப்பினாற் சுழன்று துள்ளி விறையாடா நிற்கவும் இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர் மீண்டும் வருதலை விரும்பி மிகவருந்தித் தங்கும் பொருட்டு உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ வென்று கேட்பதற்கு மழைத்துளியைத் தருகின்ற தண்ணிய கார்ப் பருவம் வந்தது.
முடிபு: உறையுநர் வரல் நசைஇ இருந்திரோ எனக் கார் வந்தன்று.
கருத்து: கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 65. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தலைவர், முல்லை, கார்ப்பருவம், குறுந்தொகை, வந்திலர், இருந்திரோ, வந்தபின்பும், எட்டுத்தொகை, வென்று, சங்க