குறுந்தொகை - 6. நெய்தல் - தலைவி கூற்று
(பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்துஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் யாவரும் துயிலவும் யான் துயின்றிலேனென்று தோழி துயின்றமையைப் புலப்படுத்தி அவளுக்குக் கூறியது).
நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. |
|
- பதுமனார். |
இடையிரவு செறிந்த இருளை உடையதாக இரா நின்றது; மனிதர் பேசுதலை ஒழித்து இனிமையாகத் துயின்றனர்; அகன்ற இடத்தை உடைய உலகத்தில் உள்ள எல்லாஉயிர்களும் வெறுப்பின்றித் துயிலா நிற்கும்; யான் ஒருத்தியே நிச்சயமாகத் துயிலேனாயினேன்.
முடிபு: யாமம் நள்ளென்றன்று; மாக்கள் அடங்கினர்; உலகமும் துஞ்சும்; யான் ஒருத்தியே துஞ்சாதேன்.
கருத்து: யாவரும் துயிலும் நள்ளிரவிலும் யான் துயின்றிலேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 6. நெய்தல் - தலைவி கூற்று, யான், இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, நெய்தல், உலகமும், துஞ்சும், ஒருத்தியே, மாக்கள், யாவரும், எட்டுத்தொகை, சங்க, யாமம்