குறுந்தொகை - 5. நெய்தல் - தலைவி கூற்று
(பிரிவாற்றாமையைால் தலைவி வருந்துதலை அறிந்து கவலையுற்றதோழிக்கு அவள், தன் கண்கள் துயிலாமையை உணர்த்தும் வாயிலாகக்காமநோயின் கொடுமையைக் கூறியது.)
அதுகொல் தோழி காம நோயே வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. |
5 |
- நரிவெரூ உத்தலையார். |
தோழி! தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குதற்குக் காரணமாகிய இனிய நிழலை உடைய புன்னை மரமானது கரையைச் சாரச்சார உடைகின்ற அலைகளால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணிற்கு இனிதாகியநீர்ப் பரப்பை உடைய மெல்லிய கடற்கரையையுடையதலைவன் பிரிந்தானாக பல இதழ்களைஉடைய தாமரை மலரைப் போன்ற என் கண்கள் இமைபொருந்துதலைச் செய்யா வாயின; காம நோய் என்பது அத்தன்மைத்தோ?
முடிபு: தோழி, புலம்பன் பிரிந்தெனக் கண்பாடொல்லா; காம நோய் அது கொல்.
கருத்து: தலைவன் பிரிவினால் யான் துயில் ஒழிந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 5. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, குறுந்தொகை, நெய்தல், உடைய, நோய், புலம்பன், கண்கள், எட்டுத்தொகை, சங்க, புன்னை