குறுந்தொகை - 44. பாலை - செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்திற்றேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)
காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. |
|
- வெள்ளிவீதியார். |
என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; நிச்சயமாக இந்த உலகத்தில் நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர் அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.
முடிபு: கால் பரிதப்பின; கண் வாள் இழந்தன; பிறர் பலர்.
கருத்து: தலைவியையும் தலைவனையும் நான் கண்டேனில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 44. பாலை - செவிலித்தாய் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, செவிலித்தாய், கூற்று, இழந்தன, பிறர், நடந்து, சங்க, எட்டுத்தொகை, நோக்கி