குறுந்தொகை - 399. மருதம் - தலைவி கூற்று
(வரைவு நீட்டித்த காலத்துத் தலைவி தோழியை நோக்கி, “தலைவர் உடனுறையின் நீங்கியும் பிரியின் ஒன்றியும் நிற்கின்றது பசலை” என்றுகூறியது.)
ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. |
|
- பரணர். |
தோழி! பசலையானது தலைவர் நம்மைத் தீண்டுந்தோறும் நம் உடலை விட்டு அகன்று பிரியுந்தோறும் பரவுதலால் ஊரினரால் உண்ணப்படும் நீரையுடையகிணற்றின் உண்ணுந் துறையினிடத்தே கூடிய பாசியைப் போன்றது.
முடிபு: பசலை, நீங்கிப் பரத்தலான் பாசியற்று.
கருத்து: பசலைநோய் மிக்கமையால் யான் வருந்துவேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 399. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, பசலை, சங்க, எட்டுத்தொகை