குறுந்தொகை - 384. மருதம் - தோழி கூற்று
(பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, “நின்சூள் பொய்யுடைத்து” என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள் நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. |
|
- ஓரம்போகியார். |
தலைவ உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும் நெடிய பலவாகிய கூந்தலையும் குறிய வளைகளையும் உடைய பரத்தையரது பெண்மைநலத்தை நுகர்ந்து துறந்துஈண்டு வருவாயாயின் நீ அவர் மாட்டுச் செய்தசூள் மிக நன்றாக இருந்தது!
முடிபு: மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!
கருத்து: நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 384. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், குறுந்தொகை, கூற்று, மகளிர், சங்க, எட்டுத்தொகை